செவ்வாய், 24 மார்ச், 2026

போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை திடீர் சரிவு

 

 போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை திடீர் சரிவு


23 3 2026

trump oil

டிரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய்யின் விலை திடீர் சரிவு

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களையும் குறிவைத்து ஈரான் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், கத்தார் போன்ற நாடுகள் உற்பத்தி நிறுத்திவிட்டன. இது உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியது.


உலகின் முக்கியமான கடல்வழி போக்குவரத்துக்கான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. அதன் வழியாக செல்லும் எதிரிகளின் கப்பல்களை வீழ்த்துவோம் என்று சூளுரைத்தது ஈரான். இதனாலும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. எங்களின் எச்சரிக்கைக்கு அதிபர் ட்ரம்ப் பணிந்துவிட்டார் என்றும் விமர்சித்துள்ளது. 2 நாட்களாக அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது, ஈரானின் முக்கிய எரிசக்தி மற்றும் மின்சார இலக்குகள் மீதான தாக்குதல்களை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளேன் என ட்ரம்ப் கூறியதை திட்டவட்டமாக மறுத்துள்ளது ஈரான். இதனிடையே, தாக்குதல் நிறுத்திவைப்பு தற்காலிகமானது. பேச்சுவார்த்தை ஏற்படும் முன்னேற்றத்தை சார்ந்திருக்கிறது என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/us-israel-iran-war-live-updates-in-tamil-world-oil-and-lpg-crisis-war-tension-11254235