புதன், 25 மார்ச், 2026

100 டாலரைத் தொட்ட கச்சா எண்ணெய் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்

 

100 டாலரைத் தொட்ட கச்சா எண்ணெய் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்



அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடும் தாக்குதல் நடத்தின. தாக்குதல்களால் ஆடிப்போன ஈரானின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, பல ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

உலகின் முக்கியமான கடல்வழி போக்குவரத்துக்கான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. அதன் வழியாக செல்லும் எதிரிகளின் கப்பல்களை வீழ்த்துவோம் என்று சூளுரைத்தது ஈரான். இதனாலும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. ஈரானுக்கும் அமெரிக்கா - இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டைக்கு நேற்று (மார்ச் 23) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அடுத்த 5 நாள்கள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது நாட்டின் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாக்குதல் நிறுத்திவைப்பு தற்காலிகமானது. பேச்சுவார்த்தை ஏற்படும் முன்னேற்றத்தை சார்ந்திருக்கிறது என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. எங்களின் எச்சரிக்கைக்கு அதிபர் ட்ரம்ப் பணிந்துவிட்டார் என்றும் விமர்சித்துள்ளது. 2 நாட்களாக அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது, ஈரானின் முக்கிய எரிசக்தி மற்றும் மின்சார இலக்குகள் மீதான தாக்குதல்களை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளேன் என ட்ரம்ப் கூறியதை திட்டவட்டமாக மறுத்துள்ளது ஈரான். 

இந்நிலையில், ஈரானில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் சேர்ந்து கூட்டுத்தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. முதற்கட்டத் தகவலின்படி இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. ஈரானின் இஸ்பஹானில் உள்ள இயற்கை எரிவாயு எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக, ஈரானின் புரட்சிகரக் காவல்படைக்கு நெருக்கமான செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில், அமெரிக்க ராணுவத்தின் ஆதரவால் ஈரான் உடனான போரில் முக்கிய இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது. ஆகவே ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும். ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தித் திட்டத்தையும் தொடர்ந்து நசுக்குவோம். லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தாக்குதல்களை தொடருவோம் என்று தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/india/us-israel-iran-war-live-updates-in-tamil-world-oil-and-lpg-crisis-war-tension-11254235