ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால்... ஈரானுக்கு பகிரங்க மிரட்டல்
விரைவில் ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை அல்லது ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படவில்லை என்றால் ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா மிகப் பெரிய ஒரு தாக்குதலை நடத்தும் என அவர் எச்சரித்தார்.
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஈரானில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர, ஒரு புதிய, நியாயமான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் இப்போது பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், அல்லது ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக திறக்கப்படவில்லை என்றால். ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றை அமெரிக்கா முழுமையாகத் தகர்க்கும்.
இதுவரை நாங்கள் இதன் மீது ஒரு தாக்குதல் கூட நடத்தாமல் இருந்து வருகிறோம். ஈரானின் 47 ஆண்டுக்கால பயங்கரவாத சகாப்தத்தில் எங்கள் பல வீரர்களைக் கொன்றதற்கான பதிலடியாகவே இந்த நடவடிக்கைகள் இருக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் டிரம்பின் இந்த பதிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.





