'ஈரானில் ஹார்மூஸ் நீரிணையை திறக்க சீனா உதவ வேண்டும்; இல்லாவிட்டால்...': ட்ரம்ப் திடீர் எச்சரிக்கை 15 03 2026
/indian-express-tamil/media/media_files/2026/03/16/us-1-22-2026-03-16-12-54-55.jpg)
ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்கு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் ஆதரவு அளிக்காவிட்டால், அந்த அமைப்பு "மிக மோசமான" விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா, இஸ’ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் ஈரானில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெரும் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட இன்னல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உலகளவில் முக்கிய கச்சா எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து தளலமாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்த முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதை மூடப்பட்டதால், இதன் மூலம் பயன்பெறும் நாடுகள், அந்த பாதை தொடர்ந்து திறந்திருக்க உறுதி செய்ய உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஃபைனான்சியல் டைம்ஸ் (Financial Times) இதழுக்கு அளத்த பேட்டியில், "இந்த ஜலசந்தியால் பயனடைபவர்கள், அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய உதவுவது மட்டுமே சரியானது மற்றும் முறையானது," என்று அவர் அந்த நாளிதழிடம் தெரிவித்தார்.





