செவ்வாய், 31 மார்ச், 2026

துருக்கிக்குள் நுழைந்த ஈரான் ஏவுகணை; சுட்டு வீழ்த்திய நேட்டோ

 

துருக்கிக்குள் நுழைந்த ஈரான் ஏவுகணை; சுட்டு வீழ்த்திய நேட்டோ

Israel War News

துருக்கிக்குள் நுழைந்த ஈரான் ஏவுகணை; சுட்டு வீழ்த்திய நேட்டோ

ஈரான் குடியரசு ஆட்சியாளர்கள் அணு ஆயுதங்களை சேகரித்து வைத்துளளதாக கூறி அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் கூட்டு சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்கள் மீது ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தியது. மேலும், ஹார்மோஸ் நீரிணையை மூடியுள்ளது. இதன் காரணமாக, வரலாற்றில் முதற்முறையாக வணிக கப்பல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் 20%, இயற்கை எரிவாயுவில் 20% மற்றும் எல்பிஜி (LPG) விநியோகத்தில் 20% இந்த ஒரு பாதை வழியாக நடைபெறுகிறது. எண்ணெய், எரிவாயு தனிமனித நுகர்வு பொருட்களாக மட்டுமல்லாமல் உணவுப் பொருள், விவசாயிகளுக்கு தேவையான உரம், மருத்துவ உபகரணங்கள், தொழில் உற்பத்தி என அனைத்திற்கும் உயிர்நாடியாக உள்ளது. அமெரிக்காவின் அத்துமீறலை உலக பொருளாதார கட்டமைப்பில் விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக ஈரான் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது.

இதற்கிடையே, ஹார்மோஸ் நீரிணையை உடனடியாக திறக்கவிட்டால். ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமெரிக்கா அழிக்கும் என ட்ரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து  ஈரானின் மிகவும்  இணக்கமான போக்கைக் கொண்ட புதிய நிர்வாகத்துடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், ஏதேனும் ஒரு காரணத்தினால் உடன்பாடு எட்டப்பட வில்லை என்றாலோ, ஹோர்முஸ் நீரிணை வணிக கப்பல் போக்குவரத்திற்கு உடனடியாகத் திறக்கப்படாமல் இருந்தாலோ, ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும், எண்ணெய் கிணறுகளையும், கார்க் தீவையும், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களையும்  தாக்குதல்கள் நடத்தி அழித்து ஒழிப்போம். கடந்த 47 ஆண்டுகால ஈரானின் பயங்கரவாத ஆட்சியில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களுக்கான கைமாறாக (Retribution) இந்த நடவடிக்கை அமையும் என்று தெரிவித்தார்.

30 03 2026 

இந்த போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 115 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. போர்க்களத்தில், ஈரானின் தப்ரிஸ் பகுதியில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலை மற்றும் டெஹ்ரானின் மின்சாரக் கட்டமைப்புகள் மீது அமெரிக்க-இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு தொழிற்பேட்டை பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கிடையே, குவைத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் நன்னீர் ஆலை மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வளைகுடா நாடுகள் தங்கள் வான்பரப்பிற்குள் நுழைந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுத்து அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. மறுபுறம், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இஸ்லாமாபாத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை வரும் நாட்களில் நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கத் தரைப்படை வீரர்களின் வருகைக்காகத் தங்கள் படைகள் காத்திருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளதுடன், கூடுதல் படைகளை அமெரிக்கா இப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தி வருவதால் சூழல் தொடர்ந்து பதற்றமாகவே நீடிக்கிறது.



source https://tamil.indianexpress.com/india/iran-war-news-live-updates-trump-iran-kharg-island-oil-price-pakistan-israel-11433864