ஈரான் பள்ளி மீதான தாக்குதல் - மார்ச் 27ல் ஐ.நா. அவசர விவாதம் 25 3 2026
/indian-express-tamil/media/media_files/2026/03/25/iran-a-2026-03-25-21-23-45.jpg)
ஈரான் பள்ளி மீதான தாக்குதல் - மார்ச் 27ல் ஐ.நா. அவசர விவாதம்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானுக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் கொண்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை முற்றிலுமாக முடியுள்ளதால் உலக அளவில் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பல நாடுகளில் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஓராண்டு காலத்திற்கு தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளார். உலகில் முதன்முதலாக தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்த நாடாக பிலிப்பைன்ஸ் மாறியுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும். அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார்.
ஈரான் உச்ச தலைவர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருந்தாலும், அதுபோன்ற எந்தவொரு பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது. எரிபொருள் தொடர்பான பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த போரை நிறுத்த உலக நாடுகள் அமெரிக்கா மற்றும் ஈரானை வலியுறுத்தி வருகிறது.





