ஈரான் தலைநகரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: தரைமட்டமான குடியிருப்புகள் - மீட்புப் பணிகள் தீவிரம்
சமீபத்தில் இஸ்ரேலின் டிமோனா அணு ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், இந்தப் போரை ஒரு அபாயகரமான கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக புஷெர் (Bushehr) அணுமின் நிலையம் தாக்கப்பட்டால், அதன் கதிர்வீச்சு பாரசீக வளைகுடா நாடுகளின் குடிநீர் ஆதாரமான கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சிதைத்து, ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் சுற்றுச்சூழல் பேரழிவிற்கு உள்ளாக்கும் என சர்வதேச சமூகம் அஞ்சுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
ஈரான் தனது மின்சாரத் தேவையில் 80 சதவீதத்திற்கு இயற்கை எரிவாயுவை நம்பியுள்ளது. அதன் மின் கட்டமைப்பைச் சிதைப்பது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் விலையேற்றத்தையும், ஈரானின் மின்சாரத்தை நம்பியுள்ள ஈராக் போன்ற அண்டை நாடுகளில் அரசியல் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும். டிரம்பின் இந்த அதிரடி எச்சரிக்கை ஈரானைப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரும் ஒரு உத்தியாகப் பார்க்கப்பட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால் அது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் மிக அதிக விலையைக் கொடுக்க வேண்டிய சூழலை உருவாக்கும். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு அமெரிக்க நிர்வாகம் எதிர்கொள்ளும் மிகக்கடினமான சோதனையாக இது உருவெடுத்துள்ளது.





