வெள்ளி, 12 ஜூன், 2015

சுவையான காரைக்குடி மீன் குழம்பு

Maalaimalar தமிழ்'s photo.

பேச்சிலர் சமையல் :
சுவையான காரைக்குடி மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன் - 1 /2 கிலோ
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 15 பல்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவியது - 1 /4 கப்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
சீரகம் - 1 /2 தேக்கரண்டி
மிளகு - 1 /2 தேக்கரண்டி
வெந்தயம் - 10
நல்லெண்ணெய் - 1 /4 கப்
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
* தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
* புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
* மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்த பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2
நிமிடங்கள் வதக்கவும்.
• அடுத்து தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
* பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதிக்க
ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
* கடைசியாக வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விட்டு இறக்கவும்.