திங்கள், 15 ஜூன், 2015

வெறும் பாலை மணல்... மாட மாளிகைகளோ கோபுரங்களோ மிகையாக இல்லாத நாடு..

தமுமுக தொண்டன்'s photo.
. மேற்கத்திய நாடுகளின் நாடு பிடிக்கும் போட்டியில் இத்தாலியின் காலனி நாடாக அடிமைப்பட்டு கிடந்தது லிபியா... அதன் விடுதலைக்காக போராடி வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற மாவீரர் உமர் முக்தாரின் தாய்மண்.... பின்னர் ஒரு மேற்கத்திய நாடுகளின் அடிமை மன்னரின் கையில் ஆட்சி... பின்னர் ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்தார் கர்னல் மாவோமர் கடாபி...
கடாபியின் ஆட்சியில் லிபியா மக்கள் அனுபவித்த வசதி வாய்ப்புகள் என்னென்ன தெரியுமா மக்களே...??? கடாபியின் மறுபக்கம்......
1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .
4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.
6.எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.
7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.
8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.
9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.
10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.
11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.
12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.
13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.
14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.
15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.
16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.. உலகிலேயே மிக பெரிய செயற்கை ஆறு இன்னும் முற்றுபெறாது உள்ளது
.உலகில் வேறு எந்தநாட்டிலும் எந்த ஆட்சியாளனும் குடிமக்களுக்கு இத்தனை வசதிகளை செய்ததில்லை
இத்தனையும் செய்த அந்த ஆட்சியாளனுக்கு மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலின் பெயரில் அங்குள்ளவர்கள் கொடுத்த முடிவு உலகறியும்
ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிற்கும் தொடர்ந்து பொருளுதவி செய்து வந்தார் ஆகவே ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு அவரை மன்னர்களின் மன்னன் என பட்டம் சூட்டி மகிழ்ந்தது
பாலஸ்தீன போராளி இயக்கங்களுக்கும் பாலஸ்தீன அதிகார மையங்களுக்கும் வாரி வாரி வழங்கிய வள்ளல் கடாபி
அரபு நாடுகள் உட்பட அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒரே கூட்டமைப்பாக செயல்படவேண்டும், தமக்குள் உள்ள பிரச்சனைகளை தாமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் மேற்கத்திய நாடுகள் தலையீட்டை அனுமதிக்ககூடாது , அமெரிக்க டாலருக்கு பெட்ரோலை விற்காமல் தங்கத்திற்கு பெட்ரோலை விற்கவேண்டும், சதாம் ஹுசைனை கொன்ற அமெரிக்காவிற்கு எதிராக உலக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும், இல்லை என்றால் சதாமுக்கு ஏற்பட்ட நிலைதான் நம்மில் ஒவ்வொருவருக்கும் வரும் என்று முழங்கினார்... அப்படியே ஆனது...
இன்று லிபியாவில் உள்நாட்டு சண்டை... போர்... இரத்தம்... கலவரம்.... அமைதியில்லை....

Related Posts:

  • Jobs ஏக இறைவனின் திருப்பெயரால்...புரைதா மற்றும் ஜித்தாவில் இயங்கும் TVS கார்கோ நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை:லேபர்கள், டிரைவர்கள், சேல்ஸ்மேன்கள் தொடர்பு கொள்… Read More
  • மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?? முக்கிய செய்தி .. மாரடைப்பை தவிர்க்க .. தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?? மாலை மணி 6:30… Read More
  • Hadis தொழுபவருக்குக் குறுக்கே சொல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது (நாட்கள் அல்ல… Read More
  • மானம்கெட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. நிர்வாண படம் என்பது ஆபாசமாக ஆகாது; அது பார்க்கக்கூடியவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்று உச்சநீதிமன்றம் ஒரு மானம்கெட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது… Read More
  • முஸாஃபர் நகர் படுகொலைக்கு காரணமான முஸாஃபர் நகர் படுகொலைக்கு காரணமான பா.ஜ.க, எம்.எல்.ஏ. தேர்தல் பிரச்சாரகராக நியமனம். கலவரத்தை தூண்டி விடும் வகையில் போலி வீடியோ வெளியிட்டதாகவும், ப… Read More