புதன், 9 டிசம்பர், 2015

துணிவான மாவட்ட ஆட்சித்தலைவர்

ராசசேகரன் மன்னை's photo.

இப்படி ஒரு துணிவான மாவட்ட ஆட்சித்தலைவர் எல்லா மாவட்டத்திலும் இருந்தா தமிழர்நாடு வெகுவிரைவில் நிலைக்கு வந்துவிடும் ன...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக சமிபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டவர் கெஜலட்சுமி...
இந்த மழை பாதிப்பினால் அடையாறு ஆற்றின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்களை இடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்து அதற்கான பணிகளை உடனிருந்து கவனித்து வருகின்றார்...
இவரிடம் யாரும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியவில்லை...
அரசியல்வியாதிகள் யாரையும் இவர் பக்கத்தில் வர அனுமதிப்பதில்லை...
அவர்கள் ஆளும்கட்சியாக இருந்தாலும் இதே நிலைதான்...
பரத்தை அடுத்த முடிச்சூர் மணிமங்கலம், வரதராஜபுரம் பகுதியிலிருந்து மழை நீர் வெளியேறி...
அடையாறு கால்வாயில் சேர இந்தப் பகுதியில் மிகப்பெரிய கால்வாய் ஒன்று உள்ளது...
இந்த கால்வாயின் நீளம் 14கி.மீட்டர்...
இதன் நீளம் மட்டும் மாறவில்லை...
ஆனால் அகலம் 60 மீட்டர்...
இது மெல்ல மெல்ல சுருங்கி சில வருடங்களில் 18 மீட்டராக மாறியது...
விளைவு அந்த பகுதியில் உள்ள எல்லா இடங்களும் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் பரிதவித்தனர்...
இதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் என எல்லாவற்றையும் அப்புறப்படுதும் பணிகள் தற்போது விரைந்து நடைபெற்றுக் கொண்டுவருகின்றது...
ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு தூர்வாரப்படுகின்றன...
அடுக்குமாடிக்குடியிருப்புகள் கூட இந்த ஆற்றினை ஆக்கிரமித்து கட்டியுள்ளார்கள்...
அத்தனையும் இடிக்கப்பட்டு வருகின்றது...
இந்த ஆட்சியருக்கு துணையாக வெள்ள பாதிப்பு நிவாரண அதிகாரி அமுதா இ ஆ ப அவர்களும் உடனிருந்து பணியாற்றுகின்றார்...
இந்த அடாத மழையிலும் இதுவரை 7கி.மீ.தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் விரைவாக அகற்றப்பட்டு வருகின்றது...
பல அடுக்குமாடிக்கட்டிடங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு விட்டது...
இப்போது இந்த ஆறு மிகப்பெரியதாக காட்சியளிப்ப தோடு அந்தப் பகுதியில் தண்ணீர் வெகுவாக வடியத் தொடங்கி உள்ளது...
அந்தப் பகுதி மக்கள் இவரை வெகுவாக பாராட்டுகின்றனர்...
இப்படி நேர்மையானவர்களும் துடிப்பானவர்களும் அதிகாரிகளாக இருப்பார்களேயானால் அவர்களுக்கு அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு தராமல் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி அவர்களை பணியிடமாற்றம் செய்து அவர்களின் செயல்களை முடக்கி விடுகின்றனர் என்பது தான் வேதனை...
இனியாவது இதுபோன்ற அதிகாரிகளை மக்களுக்காக சிறப்பான பணிகளையும் தங்கள் கடமைகளையும் ஆற்றவிடுங்கள் அரசியல்வியாதிகளே...
உங்கள் சுயநலத்திற்காக அவர்களை முடமாக்காதீர்கள்...
இதுபோன்றவர்களின் துணிச்சலான பணிகளால் தமிழர்நாடும் தமிழரினமும் இனியாவது நிம்மதியாக இருக்கட்டும்...

Related Posts: