ஞாயிறு, 27 டிசம்பர், 2015

உலகில் பயங்கரவாத்தை உருவாக்கியவர்கள் போராடும் பயங்கரவாதிகள் அல்ல, ஆயுதம் தயாரிப்பவர்கள் தான் பயங்கரவாதத்தை உருவாக்குபவர்கள்

உலக அமைதிக்கு ஒரே தீர்வு முஹம்மது நபியின் கொள்கை : இலங்கை அதிபர் பேச்சு.....!!
உலக அமைதிக்கு ஒரே தீர்வு முஹம்மது நபியின் கொள்கை என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது...
இன்றைய உலகில் பல நாடுகளில் பல பெயர்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் தலை தூக்கி உள்ளது. உலகில் பார்த்தால் இன்று பங்கரவாதத்தினால் கொல்லப்படும் மக்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள்.
இதற்கான காரணத்தை ஆராய வேண்டியுள்ளது.
அண்மையில் நான் போப் ஆண்டவரை சந்தித்தேன், அப்போது அவர் உலகில் பயங்கரவாதத்தை உருவாக்குபவர்கள் யார் என்று கேட்டார்.
நான் எந்த பதிலும் சொல்லவில்லை, அவர் கூறினார் உலகில் பயங்கரவாத்தை உருவாக்கியவர்கள் போராடும் பயங்கரவாதிகள் அல்ல, ஆயுதம் தயாரிப்பவர்கள் தான் பயங்கரவாதத்தை உருவாக்குபவர்கள் என்றார்.
பயங்கரவாதத்திற்கும் அதற்கு எதிராக போராடுவர்களுக்கும் ஒரே இடத்திலிருந்து தான் ஆயுதம் தயாரிக்கப்படுகிறது.
இதன்மூலம் உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
முஹம்மது நபி அவர்கள் இவ்வுலகிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியை காட்டியுள்ளார். மதீனா உடன்படிக்கை மூலம் உலகிற்கு சாந்தி சமாதானம் போன்றவற்றை கற்பித்து தந்தார், உலக அமைதிக்கு தீர்வு முஹம்மது நபியின் கொள்கை என்று சிலாகித்து கூறினார்.