ஞாயிறு, 27 டிசம்பர், 2015

அடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள்? உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்! ஜாக்கிரதை

சமூக வலைத்தளங்களில் தங்கள் செல்ஃபிக்களை பதிவேற்றம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆனால் இந்த செல்ஃபி அவர்களுக்கு தெரியாமலேயே ஆபத்தை ஏற்படுத்தும் என ஆராய்சியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.



இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்ஃபி மோகம் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு உதாரணமாக, தங்களுக்கு தேவையான செல்போன் வாங்கும் போது,அது செல்பி எடுக்ககூடியதாக இருக்கிறதா? கேமராவின் தன்மை எப்படி இருக்கிறது? முன்பக்க கேமராவில் ஃப்ளாஷ் இருக்கிறதா என்பதையே பெரும்பாலும் கவனித்து வாங்கும் நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.




அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர்.




இவ்வாறு நாம் எடுக்கும் செல்பியை வைத்து நம்மை எடை போடும் வேலையை மிக இலகுவாக மனிதவள மேம்பாட்டாளர்கள் செய்து முடித்து விடுகிறார்கள் என்னும் அதிர்ச்சி தரக் கூடிய முடிவு வெளியாகியுள்ளது. பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் போது சமூக வலைதளங்களில் கொண்டிருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.




ஆராய்ந்து பார்த்ததில் இப்படி செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத – வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க்கொள்பவராக இருப்பதாகவும்,
இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும் சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் அவர்கள் இருப்பதாகவும் அந்த ஆராய்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும், ஒருவேளை பணியில் இருந்துகொண்டே, செல்ஃபீக்களை எடுத்து பதிவேற்றம் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.