திங்கள், 28 டிசம்பர், 2015

தவ்ஹீத் ஜமாத்

Abdul Wahab's photo.

புதியதலைமுறை தொலைக்காட்சியின் உரக்கச்சொல்லுங்கள் நிகழ்ச்சியில் இந்த சகோதரன் பேசும் போது பாதிக்கப்பட்ட பகுதில் முதன்முதலில் களம் கண்டு நிவாரண பணிகள் மேற்கொண்டது இஸ்லாமிய இயக்கங்கள்தான் இந்த வெள்ள பாதிப்பு ஜாதிமதங்களை காணாமல் போகச்செய்திருக்கிறது என்றும் மீண்டும் அதை தேடிப்பிடித்து எங்களிடம் ஒப்படைத்து விடாதீர்கள் என சொன்னது மனதை தொட்டது. அதே போல பல இஸ்லாமிய அமைப்புகளின் பெயரை சரியாக உச்சரித்தவர் தவ்ஹீத் ஜமாத் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டு தலித் ஜமாத் என்ற ரீதியில் உச்சரித்தார் ஒருவேளை எந்தவொரு அரசியல் அமைப்புகளும் மற்ற இந்து இயக்கங்கள் தலைவர்கள் ஜாதி பேதம் காரணம் காட்டி சேரி குடிசை பகுதிகளை புறக்கணித்த போதும் அங்கெல்லாம் வீடு தேடிச்சென்று தவ்ஹீத் ஜமாத் உதவிகள் செய்த பணிகள் காரணமாக அவர் இப்படி உச்சரித்திருக்கலாம் அப்படி இருந்தாலும் அதில் தவறில்லை நன்றி சகோதரா ...!!