திங்கள், 21 நவம்பர், 2016

இதுவரை பணத்தை செல்லாது என அறிவித்த பிற நாடுகளின் கதியும் அதன் அதிபர்களின் கதியும் அதோகதியானதுதான் காரணம் ...


1- ரிபப்ளிக் ஆப் கானா ...
கடந்த 1982 ல் இதே போல் பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டவுடன்,மக்கள் வங்கிகளை சூறையாடினர்
இறுதியில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்த பின்னே இயல்பு நிலை திரும்பியது ...
2. நைஜீரியா ....
கடந்த 1984 ல் நைஜீரியாவின் அதிபர் புகாரி,
பணத்தை செல்லாது என அறிவித்தார்...
அறிவித்த 30 நாட்களுக்குள் உணவு வாங்க இயலாமல் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர் ...
பொங்கியெழுந்த நைஜீரிய மாணவர்கள், அதிபர் புகாரியை நாட்டை விட்டு அடித்துத் துரத்தினர் ...
அதன் பின்னரே நைஜீரியாவில் இயல்பு நிலை திரும்பியது ...
3- மியான்மர் என்ற பர்மா ...
கடந்த 1987 ல் பர்மிய ராணுவ அரசு இதே போல் ...
பணத்தை செல்லாது என அறிவித்தது ...
உணவு வாங்க இயலாமல் மூன்று லட்சம்
மக்கள் மடிந்தனர் ...
ஆங்சான்சூகியின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரம் மக்களை
ராணுவம் சுட்டுக் கொன்றது ...
தற்போது ஆங்சான் சூகி பர்மிய ஆட்சியைக் கைப்பற்றி வென்ற பின்னரே இயல்பு நிலை திரும்பியது ...
4- சோவியத் யூனியன் (USSR)
கடந்த 1990 ல் ,சோவியத்தின் அதிபர் கார்ப்பசேவ் பணத்தை செல்லாது என அறிவித்தார் ...
உடனடியாக கலவரம் மூண்டு சோவியத் நாடு பல நாடுகளாக உடைந்தது ...
கார்ப்சேவ் அதிபர் பதவியிலிருந்து விரட்டப்பட்டார் ...
உடைந்த சோவியத் நாட்டிலிருந்துதான் இன்றைய
ரஷ்யா என்ற தனிநாடு வல்லரசாகத் திகழ்கின்றது ...
5- சையர் நாடு ...
கடந்த 1997 ல் சர்வாதிகாரி மொகுடு
பணம் செல்லாது என அறிவித்தார் ...
இந்த அறிவிப்பின் பிண்ணனியில்
அமெரிக்க சதி இருந்தது ...
சையர் நாட்டு மக்களால் சர்வாதிகாரி
மொகுடு நாட்டை விட்டு அடித்துத் துரத்தப்பட்டார் ...
பின்னர்தான் சையர் நாட்டில் இயல்பு நிலை திரும்பியது .
6- வடகொரியா ...
வடகொரியாவின் அற்புதமான தலைவர்
திரு கிம் கடந்த 2010 ல் இதே போல்
பணம் செல்லாது என அறிவித்தார் ...
பின்,இதன் பிண்ணனியில்
அமெரிக்க சதி இருப்பதை உணர்ந்து,
தவறான ஆலோசனை கூறிய
நிதி அமைச்சர் மற்றும் 13 நிதி அமைச்சக ஊழியர்களுக்கும் மரணதண்டனை நிறைவேற்றினார் ...
மேலும் ஒவ்வொரு குடிமகன் வீட்டிற்கும்
மன்னிப்புக் கடிதமும்,பரிசுப் பொருளும் அனுப்பினார் ...
இயல்பு நிலை திரும்பி வடகொரியா வல்லரசானது ...
ஆக,பணத்தை செல்லாது என அறிவித்த எல்லா அரசுகளும் பதவியிலிருந்து அகற்றப்பட்டு,அதன் அதிபர்கள் நாட்டை விட்டே விரட்டப்பட்டுள்ளனர், என்பதுதான் வரலாறு ....