வியாழன், 16 பிப்ரவரி, 2017

மார்ச் 31-ம் தேதிக்குள் இங்கு இருப்பதையெல்லாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா..?

2015-2016ம் நிதி ஆண்டிற்கான வருமான வரித் தாக்கல் செய்யக் கடைசித் தேதி 2017 மார்ச் 31 தான். அதே போன்று 2014-2015 நிதி ஆண்டிற்கான வருமான வரி செலுத்தப்படாமல் இருந்தாலும் மார்ச் 31-ம் தேதி தான் கடைசி. சரி 2017 மார்ச் 31 எதற்கெல்லாம் கடைசித் தேதி தெரியுமா? மார்ச் 31-ம் தேதிக்குள் இங்கு இருப்பதையெல்லாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா..? வருமான வரிக்கான அபராதத்தைத் தவிர்க்கலாம் மார்ச் 31-ம் தேதிக்குள் நீங்கள் 2015-2016 நிதி ஆண்டிற்கான வருமான வரியைச் செலுத்தவில்லை என்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். வரியைச் சேமித்தல் 2016-2017 நிதி ஆண்டிற்கான வருமான வரிச் சேமிப்பு முதலீட்டுத் திட்டங்களிலும் மார்ச் 31-ம் தேதிக்குள் முதலீட்டைச் செய்ய வேண்டும். நடப்பு நிதி ஆண்டிற்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்கிறீர்கள் என்றால் முதலீட்டுத் திட்டங்களுக்கான வரி விலக்கைப் பெற முடியாது. செல்லா ரூபாய் நோட்டுகள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லா ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ அலுவலகங்களில் மாற்றவும் மார்ச் 31-ம் தேதி தான் கடைசித் தேதி. பிபிஎப் பிபிஎப் கணக்கில் ஆண்டிற்கு 500 ரூபாய் குறைந்தபட்ச கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதற்கான கடைசித் தேதியும் மார்ச் 31-ம் தேதி ஆகும். ஒருவேலைக் காலத் தாமதமாகச் செலுத்தினால் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து வருபவர்கள் ஒவ்வொரு நிதி ஆடும் குறைந்தது 1000 ரூபாய் தனது பங்களிப்பினை செலுத்த வேண்டும். மார்ச் 31-ம் தேதிக்குள் நடப்பு நிதி ஆண்டிற்குச் செலுத்தவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும். 

Read more at: http://tamil.goodreturns.in/personal-finance/2017/02/attention-6-tasks-you-should-complete-before-march-31/slider-pf29173-007068.html

Related Posts: