புதன், 30 ஏப்ரல், 2025

கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இந்தியில் பேச்சு: வாக்குவாதத்தில் இறங்கிய சமூக ஆர்வலர்கள்; புதுச்சேரியில் பரபரப்பு

 Puducherry Electricity Bill Hike opinion hearing meeting Officials speak in Hindi Social activists argument Tamil News

புதுச்சேரியில் நடைபெற்ற மின் கட்டண உயர்வு கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இந்தியில் பேச எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது


புதுச்சேரியில் நடைபெற்ற மின் கட்டண உயர்வு கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இந்தியில் பேச எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது

புதுச்சேரியில்  2025-26 முதல் 2029-30 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு மின் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்பு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள் இந்தியில் பேசியதற்கு  சமூக அமைப்புகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கருத்து கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அதிகாரியில் இந்தி மொழி பேசினார்கள்.மேலும் சமூக அலுவலருக்கும் பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்ட குறை கேட்புக்கான கடிதம் ஆங்கிலத்திலும் இந்தியன் விருந்தின இதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர் தமிழில் ஏன் கொடுக்கவில்லை என கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பொதுமக்கள் தமிழில் கூறுவதை மொழிபெயர்த்து சொல்ல அதிகாரிகள் இருப்பதாக கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினார்கள். தொடர்ந்து கருத்துக்கணிப்பு கூட்டம் நடைபெற்றது

செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி. 



source https://tamil.indianexpress.com/india/puducherry-electricity-bill-hike-opinion-hearing-meeting-officials-speak-in-hindi-social-activists-argument-tamil-news-9016009