சனி, 1 நவம்பர், 2025

9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

 

 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் 1 11 2025

தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைச் சட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டம் கடந்த அக்டோபர் 14 முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கும் சட்டம் உட்பட மொத்தம் 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், குறிப்பாக 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைச் சட்டம் மீண்டும் கவனம் பெற்றது.  “இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடப்பதால், அடுத்த நிதியாண்டுக்கும் நிதி ஒதுக்குவது சரியல்ல” எனக் காரணம் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், ஆளுநரின் கருத்தை நிராகரித்த, அந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அவரது ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிதி பொறுப்புடைச் சட்டம் உட்பட மொத்தம் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கிய மசோதாக்கள்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் தொடர்பான திருத்த மசோதாக்கள்.

கடல் சார் வாரியம் தொடர்பான மசோதா.

தமிழ்நாடு மின் நுகர்வு அல்லது விற்பனை வரி திருத்த மசோதாக்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்சி-க்களுக்கான ஓய்வூதிய உயர்வுக்கான தமிழ்நாடு சம்பளம் வழங்கல் திருத்த மசோதா.

பல்வேறு வழக்கிழந்த சட்டங்களை நீக்குவதற்கான 2 சட்ட மசோதாக்கள்.    

மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைச் மசோதா என மொத்தம் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/governor-rn-ravi-approves-9-bills-including-finance-bill-of-tamil-nadu-government-10611957

பொங்கல் பண்டிகை பரிசு; நவ.15 முதல் ரேஷன் கடைகளில் இதை வாங்கிடுங்க: அமைச்சர் கொடுத்த அப்டேட்

 Pongal Gift Saree

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி காஞ்சிபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்திய அளவில் காஞ்சிபுரம் பாட்டுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இங்கு 30-க்கு மேற்பட்ட பட்டுப்புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் முருகன் கூட்டுறவு சங்கம், அதன் விற்பனை நிலையத்தை என்னைக்கார தெருவில் உள்ள சொந்த இடத்தில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் திறப்பு விழா, நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றித் இந்த விற்பனை நிலையத்தை, துவக்கி வைத்த, தமிழக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ரிப்பன் வெட்டி முதல் வியாபாரத்தைத் துவங்கி வைத்தார். 

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, “திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் கட்டி மகிழ்கின்றனர். இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி சேலைகள் நவம்பர் 15-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது..
கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுகள்தான் உண்மையான பட்டு, அதனை தாங்கள் உத்திரவாதத்துடன் விற்பனை செய்கின்றனர்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை, தி.மு.க. ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளது, குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ரூ800 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நெசவாளர்களுக்கு ரூ800 முதல் ரூ1500 வரை கூலி கிடைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ரூ9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது என அமைச்சர் காந்தி குறிப்பிட்டுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-gandhi-confirmed-pongal-gift-starting-date-10611977

இந்தியா உடனான வர்த்தகத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது; கோவையில் ஜப்பான் நகர துணை மேயர் பேட்டி

 

kovai japan

கோவை தொழில்துறையைச் சேர்ந்த 13 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு சமீபத்தில் ஜப்பானின் ஹமா மட்சு நகரத்திற்குச் சென்றது. அங்கு அவர்கள் முன்னணி தொழில்துறையினரை சந்தித்து, வணிக மேம்பாடு தொடர்பான வழிகளை ஆராய ஹமா மட்சு நகர மேயரைச் சந்தித்து திரும்பினர்.

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் ஹமா மட்சு நகர துணை மேயர் .நைட்டோ ஷின்ஜிரோ தலைமையில் ஜப்பான் நாட்டில் இருந்து வந்த குழுவினர் கோவையில் தொழில் துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

கோவை சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதில் கல்லூரியின் தலைவர் அசோக் பக்வத்சலம், கார்பரேட் இணைப்புகளின் தேசிய இயக்குனர் வேதா பெஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”ஜப்பானுக்கும் இந்தியாவுக்குமான வர்த்தகத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கோவை நகர் மற்றும் ஜப்பானின் ஹமா மட்சு நகர் இடையே தொழில் வர்த்தகம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. கோவையில் இருந்து ஜப்பானிற்கு தொழில் துவங்கு வதற்கான வாய்ப்புகள் இனி கூடுதலாக உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த தொடர்பு இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது,” என்று தெரிவித்தனர்.

பி.ரஹ்மான், கோவை 


source https://tamil.indianexpress.com/business/tamil-nadu-hold-important-stake-on-trade-between-india-and-japan-hamamatsu-mayor-10611413

பீகார் தேர்தல் அறிக்கை: ஏழைகளை மையப்படுத்தி, வளர்ச்சி இலக்குகளை நோக்கி என்.டி.ஏ-வின் இரட்டை வியூகம் - ஒரு அலசல்!

 31 10 2025 


தேசிய ஜனநாயக கூட்டணி பீகார் தேர்தலுக்கான தனது அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. எதிர்க்கட்சியான மகாகட்பந்தன் கூட்டணியின் வாக்குறுதிகளுக்குப் போட்டியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. 

இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை உறுதி அளித்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி, திறன் கணக்கெடுப்பு அடிப்படையில் 1 கோடிக்கும் அதிகமான அரசு வேலைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மேலும், பீகாரை உலகளாவிய திறன் மையமாக மாற்றும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மெகா திறன் மையம் அமைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான கவனம்

என்.டி.ஏ தேர்தல் அறிக்கை, பெண்கள் மீது தெளிவான கவனம் செலுத்துகிறது. முக்கிய மந்திரி மஹிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவி வழங்குவதாகவும், 1 கோடி பெண்களை 'லட்சாதிபதி தீதி'களாக மாற்றுவதாகவும், அத்துடன் பெண் தொழில்முனைவோரை மில்லியனர்களாக மாற்றும் மிஷன் கோடீஸ்வரர் திட்டத்தையும் உறுதியளிக்கிறது. மகாகட்பந்தன் கூட்டணி, 'மாய் பஹின் மான் யோஜனா' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தது.

இந்தத் தேர்தல் அறிக்கை, மாநில மக்கள் தொகையில் 36% உள்ள மிகப் பெரிய பிரிவினரான மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கும் (இ.பிசி - EBCs) முக்கியத்துவம் அளிக்கிறது. இ.பிசி பிரிவைச் சேர்ந்த வணிகக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் உதவி மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார நிலைமைகளைப் பற்றிக் கண்டறிய, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மகாகட்பந்தன் கூட்டணி, இ.பிசி-களுக்கு 'வன் கொடுமை தடுப்புச் சட்டம்' மற்றும் பஞ்சாயத்து, நகர்ப்புற அமைப்புகளில் அவர்களின் இட ஒதுக்கீட்டை 20% லிருந்து 30% ஆக உயர்த்துவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.

பட்டியல் சாதிகளைச் (எஸ்சி) சேர்ந்த உயர்கல்வி மாணவர்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்குவதாகவும், அத்துடன் எஸ்சி தொழில்முனைவோருக்குச் சிறப்புத் துணிகர நிதியும் (venture fund) தேசிய ஜனநாயக கூட்டணியால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மகாகட்பந்தன் கூட்டணி, ஆண்டுதோறும் 200 எஸ்சி - எஸ்டி மாணவர்களுக்கு வெளிநாட்டில் உயர் கல்விக்கு நிதியளிக்கும் உதவித்தொகை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களின் ஒதுக்கீட்டை 16-லிருந்து 20% ஆக உயர்த்துவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.

விவசாயிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பீகாரில் 89% மக்கள் இன்னும் கிராமப்புறங்களில் வாழும் விவசாயிகளுக்குப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 வழங்கும் கர்பூரி தாக்கூர் கிசான் சம்மான் நிதி தொடங்கப்படும் என்று என்.டி.ஏ உறுதியளித்துள்ளது. வேளாண் உள்கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும் என்றும், பஞ்சாயத்து அளவில் கோதுமை, நெல், பருப்பு மற்றும் சோளம் ஆகியவற்றை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்.எஸ்.பி) கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாகட்பந்தன் கூட்டணி, அனைத்துப் பயிர்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்.எஸ்.பி) கொள்முதல் செய்வதாகவும், மண்டிகள் மற்றும் ஏ.பி.எம்.சி (APMC) சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாகவும் உறுதியளித்தது. மகாகட்பந்தன் கூட்டணியின் வாக்குறுதியின்படி, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ (MGNREGA) தினக்கூலி ரூ.255-லிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்படும், மேலும் வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 200 ஆக இரட்டிப்பாக்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணி, மீன் உற்பத்தியை இரட்டிப்பாக்கி ஏற்றுமதியை அதிகரிக்க பீகார் மத்ஸ்ய மிஷன் மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்த ஒவ்வொரு பிளாக்கிலும் குளிரூட்டும் மற்றும் பதப்படுத்தும் மையங்களைத் திறக்கும் பீகார் துக்த் மிஷன் ஆகிய திட்டங்களையும் உறுதியளித்துள்ளது.

சமூகப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, என்.டி.ஏ 125 யூனிட் இலவச மின்சாரம், ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை, 50 லட்சம் புதிய வீடுகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ஆகியவற்றை உறுதியளித்துள்ளது. இந்தியா கூட்டணி, 200 யூனிட் இலவச மின்சாரம், விதவைகள் மற்றும் முதியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,500 மற்றும் ரூ.25 லட்சம் வரை இலவச சுகாதாரக் காப்பீடு ஆகியவற்றை உறுதியளித்தது.

உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகள்

என்.டி.ஏ, மாநிலத்தை மாற்றுவதற்காக 7 அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் 3,600 கி.மீ ரயில்வே தண்டவாளங்கள் நவீனமயமாக்கல் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களை உறுதியளித்துள்ளது. மேலும், 4 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையும், பாட்னாவில் புதிய பசுமைப் பகுதி நகரமும், முக்கிய நகரங்களுக்கு அருகில் துணை நகரங்களும் அமைக்கப்படும்.

இந்தத் தேர்தல் அறிக்கை, ஏழைகளை அணுகுவதுடன் வளர்ச்சி இலக்குகளையும் இணைக்கிறது. பாட்னா, தர்பங்கா, பூர்ணியா மற்றும் பாகல்பூரில் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் 10 புதிய நகரங்களில் இருந்து உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. 'விக்சித் பீகார் ஆத்யோகிக் மிஷன்' மூலம் ₹1 லட்சம் கோடி செலவில் தொழில்துறை புரட்சி மற்றும் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும் 'விக்சித் பீகார் தொழில்துறை மேம்பாட்டு மாஸ்டர் பிளான்' பற்றியும் பேசுகிறது.

ஆன்மீக நம்பிக்கையை நகரமயமாக்கலுடன் இணைக்கும் விதமாக, சீதா தேவியின் பிறந்த இடத்தைக் குறிக்கும் வகையில் மிதிலா பகுதியில் 'சீதாபுரம்' என்ற புதிய ஆன்மீக நகரத்தை அமைக்கவும் என்.டி.ஏ உறுதியளித்துள்ளது.



source https://tamil.indianexpress.com/india/decode-politics-bihar-manifesto-nda-outreach-poor-with-aspirational-pitch-addresses-jobs-issue-10611662

வேளாண் துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே அவலம்: சேத்தியாத்தோப்பில் முளைத்த நெல் மூட்டைகள்


கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கிய நிலையில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி இன்று நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், வேளாண் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டதாக சௌமியா அன்புமணி குற்றச்சாட்டினார்.

31 10 2025

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 7,500 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. 

Sowmiya 2

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியிருக்கும் நிலையில், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி சேத்தியாத்தோப்பில் முளைக்க துவங்கிய நெல் மூட்டைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பொழுது பா.ம.க வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும், நெல் மூட்டைகளை பார்வையிட்ட அவர் நன்கு நாற்றுகள் முளைக்கும் அளவிற்கு நெல் மூட்டைகளை வீணாக்கி விட்டதாக குற்றம் சாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி வேளாண்மை துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே நெல் மூட்டைகள் இந்த நிலையில் உள்ளதாகவும் வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட் அறிவித்து எந்த பயனும் இல்லை எனவும் கூறினார். 

Sowmiya 2

மேலும், தஞ்சாவூர் நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக தெரிவித்த சௌமியா அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆண்டு தோறும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவதாகவும் வேளாண்மை துறையை மூன்று துறைகளாக பிரித்து நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.


செய்தி: பாபு ராஜேந்திரன் - கடலூர்

source https://tamil.indianexpress.com/tamilnadu/sowmiya-anbumani-visit-paddy-bundles-sprouting-in-the-sethiyathoppu-criticize-dmk-govt-10611542