சனி, 5 டிசம்பர், 2015

உடனடியாக மாநில் நிர்வாகக் குழுவைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினோம்.

தமிழக மக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழையாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் மக்கள் பாதிக்கப்படுவதாக செய்திகள் வந்த உடன் பாதிப்பு மிகக் கடுமையானது என்பதை நாங்கள் உணர்ந்தோம். உடனடியாக மாநில் நிர்வாகக் குழுவைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினோம்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் செயல்வீரர்களிலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் தொண்டர்களுடன் பாதிப்பு ஏற்படாத மாவட்டங்களில் இருந்தும் உடனடியாக நிவாரணப்பணியில் ஈடுபடுவதற்கு தயார் படுத்திக் கொண்டு சக்தி உள்ள செயல்வீரர்கள் புறப்பட்டு வருமாறு தகவல் கொடுத்து தொண்டர்களைக் களமிறக்கினோம்.
முதல் கட்டமாக வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு ஒரு குழுவையும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தரமான உணவு சமைக்க ஒரு குழுவையும், சமைக்கப்பட்ட உணவுகளையும் பால் மற்றும் பிஸ்கட்களையும் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு குழுவையும் நிவாரணப் பொருட்கள் வரும் போது அதை வகைப்படுத்தி பிரித்து பகுதி வாரியாக வினியோகம் செய்ய ஒரு குழுவையும் நியமித்தோம் என்னேரமும் தலைமையில் இருந்து பாதிப்புகள் பற்றி வரும் செய்திகளை உடனுக்குடன் களத்தில் நிற்பவர்களுக்கு தெரிவித்து பாலோ பண்ண ஒரு குழுவையும் அமைத்தோம்.
களத்தில் இறங்கும் போதுதான் மிக முக்கியத் தேவை படகுகள் தான் என்பது தெரிந்தது மீட்பதற்கும் படகுகள் தேவை. உணவுகளைக் கொண்டு போய்க் கொடுக்கவும் படகுகள் தேவை.
இதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள் என்று பல மட்டங்களில் முயற்சி செய்தோம். ஒரு படகைக் கூட யாரும் ஏற்பாடு செய்து தரவில்லை. ஆனால் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு கடமையாற்றியவர்களுக்கெல்லாம் படகுகள் கொடுத்தார்கள்.
உடனடியாக மீனவர்களிடம் வாடகைக்கு படகுகள் கேட்டோம். தங்கள் வாழ்வாதாரமாக உள்ள படகுகளை நம்பி எப்படி கொடுப்பது என்று சந்தேகப்பட்டு வாடகைக்கும் படகுகளைத் தரவில்லை. நீங்களே படகை இயக்குங்கள். படகுக்கான வாடகையையும், உங்களுக்கான ஊதியத்தையும் தருகிறோம் எனக் கூறி குறைந்த எண்ணிக்கையில் தான் வாடகைக்கு எடுக்க முடிந்தது.அதை வைத்துத் தான் இயன்ற அளவு இப்பணிகளை மேற்கொண்டோம்.
அடுத்து முக்கியப் பிரச்சனை நிதியாதாரம். இது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாம் நடத்தும் முதியோர் இல்லம் சிறுவர் இல்லம், மதரசாக்கள் ஆகியவற்றின் நிதியிலிருந்து கடனாக எடுத்து செலவிடுவோம். நிதி திரட்டும் வரை காத்திருக்க நேரமில்லை. அது பாதிப்புகளை அதிகமாக்கும்.என்று முடிவெடுத்து என்ன செலவானாலும் பணியில் சுணக்கம் ஏற்படக் கூடாது. என்று முடிவு செய்து ஒவ்வொரு குழுவும் எப்போது எவ்வளவு தேவைப்பட்டாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தோம்.
இதன் காரணமாக பணிகள் தொய்வில்லாமல் நடந்தன.
நமது பணிகளைத் துவக்கியதும் மக்கள் தாராளமாக நிதியை அள்ளி வழங்கி வருகின்றனர்.
இந்த ஜமாஅத் பொருளாதாரத்தில் நெருப்பாக இருக்கும் என்று அறிந்து வைத்துள்ள முஸ்லிம்களும் பணிகளைப் பார்த்த முஸ்லிமல்லாத சகோதரர்களும் வாரி வாரி வழங்கி வருகின்றனர்.
மக்கள் எந்த நம்பிக்கையில் நிதி அளிக்கிறார்களோ அதை இந்த ஜமாஅத் காப்பாற்றும். கடந்த காலங்களில் சுனாமி ஏற்பட்ட போது இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டி முழுமையான கணக்குகளை வெளியிட்டோம். சுனாமி ஏற்பட்ட போது திரப்பட்ட பொருட்களை பொருட்களாக வினியோகித்தோம், பணமாக திரட்டப்பட்ட தொகையை பணமாகவே கொடுத்தோம். பொருட்களாக கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பொருளுக்கு இருபதாயிரம் கணக்கு எழுதுபவர்களைப்.போல் மக்கள் நம்மையும் கருதக் கூடாது என்பதால் பணமாகவே கொடுத்தோம். இப்படி முழுமையான கணக்குகளை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் உணர்விலும் வெளியிட்டோம்.
சுனாமி இதைவிட சவாலான பணியாக இருந்தது. இறந்தவர்களின் உடலைத் தேடி எடுப்பதும் அடக்கம் செய்வதும், மருத்துவம் செய்வதும் என பணிசெய்து பழக்கப்பட்ட நம் தொண்டர்களுக்கு இது எளிதாகவே இருந்தது.
அடுத்து தானே புயல் கடலூரைத் தாக்கிய மறு நாள் குறைந்தது இரண்டாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை வீடு விடாக தேடிப்போய்க் கொடுத்தோம். அதற்கான கணக்குகளையும் உணர்வில் வெளியிட்டோம்
அப்போது முகநூல்களும் இல்லை. வாட்சப்பும் இல்லை. வழக்கம் போல் ஊடகத்தில் நமது பணிகளைப் போடாததால் அப்பணிகள் உலகுக்குத் தெரியவில்லை. இந்தப் பணிகளிலும் 90 சதவிகிதம் முஸ்லிமல்லாத மக்கள் தான் பயன்பெற்றனர்.
இரத்த தானத்தில் 11 ஆண்டுகளாக நாம் முதலிடத்துக்கான விருதைப் பெற்று இருந்தும் அது குறித்து எந்த மீடியாக்களும் போட்டதேயில்லை. இரத்த தானம் என்று நாடகம் நடத்துவோர் பற்றி விரிவாக செய்தி சொல்வார்கள். இவர்கள் விளம்பரப்படுத்துவார்கள் என்பதற்காக நாம் இப்பணியைச் செய்யவில்லை. அல்லாஹ்வின் அன்பைப் பேறுவதற்கு மட்டுமே செய்கிறோம்.
இப்போது திரட்டப்பட்ட ஒவ்வொரு பைசாவும் முறையாக செலவிடப்படும். நிவாரணப் பணிகளுக்கு போக மீதம் இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பாதிப்புகளைத் தக்க முறையில் ஆராய்ந்து நிவாரணத் தொகையாக பிறகு வழங்கப்பட்டு விடும்.
இது குறித்து முறையான கணக்குகள் உணர்வு வார இதழிலும் வெளியிடப்படும்.
நமது முக நூலிலும் வெளியிடப்படும்.
நமது எல்லா இணைய தளங்களிலும் வெளியிடப்படும்.
உதவி செய்தோர் மனநிறைவு அடையும் வகையில் கணக்குகள் முறையாக வெளியிடப்படும்.
குறிப்பு: நிவாரணப் பணிகளைப் பார்த்து விட்டு அமைச்சர்கள் உங்களுக்கு எவ்வளவு பணம் வேணுமோ கேளுங்கள் என்று கேட்டார்கள். இதனால் சில நிர்பந்தங்கள் ஏற்படலாம் என்பதால் மக்கள் தாராளமாக தந்து கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறி மறுத்து விட்டோம், மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்க எவ்வளவு உணவுப் பொட்டலமும் தருவதற்கு முன் வந்தார்கள். உணவின் தரம் எங்களுக்கு திருப்தி அளிக்காததால் நாங்கள் சமைத்து வினியோகம் செய்து கொள்கிறோம் எனக் கூறி அவ்வாறு செய்து வருகிறோம்.
எனவே எல்லாமே மக்கள் தரும் நன்கொடைகள் தான். எனவே மக்களுக்குக் கணக்கு காட்டும் கடமை எங்களுக்கு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.
பணிகள் முழுமையாக முடிந்த உடன் கணக்குகள் வெளியிடப்படும் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறோம்.

Related Posts: