புதன், 9 நவம்பர், 2016

இன்னொரு பிரதமரும் இதுபோன்று செய்துள்ளார்..யாரென்று தெரியுமா?

ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு 1978ம் ஆண்டு பிரதமராக இருந்த ஜனதாக் கட்சியின் மொரார்ஜி தேசாய் ரூ.100க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் 1938 ஆம் ஆண்டு இந்தியா இருந்த காலத்தில் அதிக பட்சமாக 10 ஆயிரம் ரூபாய் அச்சடிக்கப்பட்டது. இந்திய ரிசர்‌வ் வங்கியின் கணக்கில் வராத பணங்களை தடுக்கும் நோக்கில் 1946 ஆம் ஆண்டு ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. 1954 ஆம் ஆண்டு மக்கள் வசதிக்காக 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதனால், பல நிதி குளறுபடிகள் எழுந்ததுடன் பயங்கரவாதிகள் லட்ச கணக்கில் பணத்தை சுலபமாக கடத்துவதாக உளவுத்துறை எச்சரித்தது. ‌இதனையடுத்து, 1978 ஆம் ஆண்டு, ஆயிரம், 5 ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய் அறிவித்தார். 2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இதனை தளர்த்தி ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என அறிவித்தார். இந்நிலையில் தற்போது 500ம், 1000மும் திரும்பிப் போயுள்ளது.