சனி, 5 நவம்பர், 2016

" திப்பு விடுதலைப்போரின் முன்னோடி" நூல்.

திப்புவின் நிர்வாகத்தில், அரசால்,
சமய நிறுவனங்களுக்கு செலவழிக்கப்பட்ட
ஆண்டுத்தொகையான 2,33,959 வராகன்களில்,
இந்துக்கோயில்கள் மடங்களுக்கு மட்டும்
2,13,959 வராகன்கள் அளிக்கபட்டது என்ற
கணக்கு விவரமே, திப்பு தன் நாட்டில்
பெருவாரி மக்களாகயிருந்த இந்துக்களின்
உணர்வுகளைபொற்றும் வகையில்,
அவர்களது சமயப்பணிக்கு ஆதரவளித்துச்
செயல்பட்டது நன்கு விளங்கும்.
பீர்லதா என்பவர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில்
வசித்த இஸ்லாமியப்பெரியவர். இவருக்கு
பல சீடர்கள் இருந்தார்கள். ஒரு முறை
நகரத்து இந்துக்கள் நகரின் முக்கிய வீதி வழியாக சுவாமி ஊர்வளம் நடத்தினர்.
இதனைக்கண்ட பீர்லதாவின் சீடர்கள்
எள்ளி நகையாடினர். தொடர்ந்து ஏற்பட்ட
கலவரத்தில், பீர்லதாவின் சீடர்கள்
ஊர்வலத்தில் வந்தவர்களால் தாக்கப்பட்டனர்.
செய்தி அறிந்து சீற்றமடைந்த பீர்லதா,
"ஒரு முஸ்லிமின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லையா"
எனக்கேட்டு திப்புவிற்கு விண்ணப்பித்தார்.
அதன் மீது விசாரணை நடத்திய திப்பு,
குற்றம் முழுவதும் பீர்லதாவின் சீடர்கள் மீது
இருப்பதை அறிகிறார். அவ்வாறு அறிந்து
அவர் செயல்பட்ட விதம், ஆட்சியாளர்கள்
இன்றைக்கும் கடைபிடிக்கவேண்டிய
பெருமிதச்செயலாகும்.
"நீதியின் கண்களுக்கு, இந்துவும் முஸ்லிமும் ஒன்றே". குற்றவாளிகளைத்தான் தண்டிப்பேன்
என்று திப்பு அறிவித்தது, பீர்லதாவுக்கு
பெரும் சினத்தை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடவடிக்கை
எடுக்கவில்லையென்றால், தாம் மைசூரை
விட்டே வெறியேறிவிடுவதாக திப்புவிற்கு
பீர்லதா அறிவிக்கிறார். நீதியின்பால் கொண்ட
பிடிப்பால், சற்றும் கலங்காத திப்பு,
தங்கள் விருப்பம் அதுவானால், நீங்கள்
மைசூரை விட்டு வெளியேறிவிடலாம் என
உடனடியாக பீர்லதாவுக்கு அறிவித்துவிட்டார்.
ஆதாரம்...Dr.வெ.ஜீவானந்தம் அவர்கள்,
அமைதி அறக்கட்டளை மூலம் வெளியிட்ட,
" திப்பு விடுதலைப்போரின் முன்னோடி" நூல்.



Related Posts:

  • அதிசயிக்க வைக்கும் ஃபின்லாந்து கல்விமுறை..!!! அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? படிச்சா செம கடுப்பாகிவிடுவீர்கள்! பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் ம… Read More
  • தொழுகை நடக்காத பள்ளிவாசல்.. அன்று ஈதுஹா வாகவும்............இன்று கபுர் இல்லா தர்ஹா வாகவும்.......திகழும் எங்கள் ஊர் சின்னம்.........தொழுகை நடக்காத பள்ளிவாசல்......மன்னிக்கவும்… Read More
  • Hadis -துன்பம் ஏற்படும்போது உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்த… Read More
  • அல்குர்ஆன் - படிப்பினை (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம… Read More
  • ‎விளையாட்டை‬ விளையாட்டாக பாருங்கள். பாக்கிஸ்தான் காரன் 10கிலோ மீட்டர் உள்ளே வந்தபோது தேசப்பற்றை காணவில்லை? சைனாகாரன் 20 கிலோ மீட்டர் உள்ளோ வந்தபோது நாட்டுப்பற்றை காணவில்லை? அந்நிய மு… Read More