வியாழன், 16 பிப்ரவரி, 2017

பிஜேபி போல் கொல்லைப்புறமாக திமுக வராது ! – ஸ்டாலின் அதிரடி

பிஜேபி போல் கொல்லைப்புறமாக திமுக வராது !
கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரும் கொள்கை திமுகவுக்கு இல்லை என்றும் அது பிஜேபிக்கு கை வந்த கலை என்றும்  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையத் தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலை அனைவருக்கும் தெரி யும். பன்னீர்செல்வத்தையா, எடப் பாடி பழனிச்சாமியையா, அல்லது எதிர்க்கட்சியான திமுகவையா, யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கப் போகிறார் என ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரும் கொள்கை திமுகவுக்கு இல்லை. மக்களைச் சந்தித்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, மக்களுக்கான ஆட்சியை நடத்துவதுதான் திமுக வின் கொள்கை.
சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்காக அதிமுகவினர் திட்டமிட்டதால் தமிழக அரசி யலில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பால் அவர் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருமே குற்றவாளிகள்தான் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள னர். 21 வருடமாக நடைபெற்ற வழக்கில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை முக்கியம் என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக் காட்டியுள்ளது.
நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கியபோது, அதில் திமுக சதி இருப்பதாக விமர்சித்தார்கள். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக வினர் தாடி வைத்து, மொட்டை டித்துக்கொண்டனர். ஆனால் இப் போது அதே தீர்ப்பு உறுதி செய் யப்பட்டுள்ளதை அறிந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கு கின்றனர். அதிமுக இரண்டாக உடைந்து முதல்வர் பதவிக்கான போட்டியில் அனைவரும் உள்ள தால், நிலையான ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரும் என எதிர்பார்த்தால், அதற்கு முன்பாகவே சட்டப்பேரவைத் தேர்தல் வந்துவிடும் சூழல் உள் ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் சென் னைக்கு அழைக்கப்பட்டுள்ள தாக வெளியான தகவல் குறித்து ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில ளித்த ஸ்டாலின், ‘‘அப்படி கூட்டம் நடப்பதாக ஆதாரப்பூர்வமாக தகவல் வந்ததா?. அதுபோன்ற எந்தக் கூட்டத்தையும் நான் கூட்டவில்லை’’ என்றார்.
source: kaalaimalar

Related Posts:

  • Jobs Infosys Ltd. requires For Freshers BE - B.Tech -MCA -ME - M.Tech : 2011 - 2012-2013 Passout at Bangalore -Hyderabad - Chennai - All IndiaClick here t… Read More
  • மகத்துவமிக்க இரவு மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம்அருளினோம்.மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித்தெரியும்?மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை வ… Read More
  • எல்லாம் தெரியும் - முபட்டி TNTJ TNTJ, தவறுசெய்தல் - சரி என்று ஆகாது TNTJ - பாங்கு  8.00  - தொழுகை  9.15   (இஷா) தொழுகை  நேரம்   குறிக்கப்பட்ட  … Read More
  • மதுவிலக்கு தமிழகத்தில் 1947ல் இருந்து 1971ம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. ஓமந்தூர் ராமசாமி, பக்தவச்சலம், அண்ணாதுரை, காமராஜர் மத… Read More
  • போலி என்கவுன்ட்டர்:  இந்திய ஜனநாயகத்தின் மீதான ஒரு கரும்புள்ளி ஒரு போலி என்கவுண்டர் கொலை மற்றும் ஏழு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தனது முதல் குற்ற அறிக்கை தாக்கல்… Read More