சனி, 18 பிப்ரவரி, 2017

வாக்கெடுப்பல்ல...கருத்தாய்வு....!


வாக்கெடுப்புக்கும்,கருத்தாய்வுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இவரா ? அவரா ? என்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி படிவத்தில் எழுதி கேட்கவில்லை.
இன்றைய அரசியல் சூழலில் என்ன செய்யலாம் ? என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் தான் முன் வைத்தார்.இதை ஒரு முன் மாதிரி ஜனநாயகம் என அனைவரும் பாராட்டுகின்றனர்.
அதில் தொகுதி நலனுக்கு எது உகர்ந்ததோ அதற்கு முன்னுரிமை கொடுத்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யுமாறு தான் அதிகமானோர் கருத்து கூறியுள்ளனர்.
எனவே,இதில் அவர் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை தலைமை நிர்வாகக் குழு வழிகாட்டியிருக்கிறது.
O.பன்னீர் செல்வத்தின் சார்பில் மஜக தலைவர்களை மா.பாண்டியராஜன் மற்றும் மதுசூதனன் இருவரும் சந்தித்தனர். பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயபால் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது பாஜக வுடன் OPS அவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து மஜக தலைவர்கள் தங்கள் ஐயங்களை எழுப்பினர்.
குறைந்தபட்சம், வகுப்புவாத சக்திகள் வளர்க்க அனுமதிக்க மாட்டோம் என ஒரு அறிக்கை வெளியிடுமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டோம்.கடைசி வரை வெளியிடவில்லை.
இப்போது எங்கள் முன்னால் சகாக்கள், ஏன் நீங்கள்
OPS ஐ ஆதரிக்கவில்லை என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக அறிக்கை விடத் தயங்கிய OPS அவர்களை எப்படி ஆதரிக்க முடியும்? எனவேதான் நாங்கள் எடப்பாடி. பழனிச்சாமியை ஆதரித்தோம்.
நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். இரட்டை இலையில் போட்டியிட்டோம். இரட்டை இலை உள்ள அதிமுகவுடன் இப்போதும் கூட்டணியில் தொடர்கிறோம்.
நாங்கள் சரியான நேரத்தில், தெளிவான முடிவை எடுத்திருக்கின்றோம்.
இந்த ஆட்சி கவிழாதா? மீண்டும் தேர்தல் வராதா? என நினைத்து காத்திருந்தவர்களுக்கு, அதிமுக ஆட்சி மீண்டும் தொடர்வது வயிறு எரிகிறது.
அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?