வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

எடப்பாடி நாளை வரை முதலமைச்சராக இருப்பாரா?” – பொன்னார் ! பாஜக அடுத்த சதிக்கு திட்டமா ? – அதிர்ச்சி தகவல் !

தமிழ்நாடு தற்போது புதிதாக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்காது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நேற்று அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். நாளை அவர் சட்டப் பேரவையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு 124 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டாலும், நாளைதான் அதன் முடிவு தெரியும். ஒருவேளை எடப்பாடிக்கு பெரும்பான்மை கிடைக்க வில்லை எனில் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
 

இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமி நாளை வரை முதலமைச்சராக இருப்பாரா என கந்தேகம் இருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் இனி குடும்ப ஆட்சி என்பதே இருக்கக்கூடாது என தெரிவித்த பொன்னார், தமிழ்நாடு தற்போது புதிதாக பதவியேற்றிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்காது என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழக அரசியல் குழப்பத்துக்ககு காரணம் பாஜக தான் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் பொன்னாரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://kaalaimalar.net/pon-radhakrishnan-to-cm/

Related Posts:

  • சூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் இயந்திரம். வந்தாச்சு வந்தாச்சு, சூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் இயந்திரம். கருவியின் மொத்த விலை - Rs. 4,50,000/-எம்.என்.ஆர்.ஈ மூலம் அளிக்கப்படும் மத்திய அரசு… Read More
  • கற்றாழை கற்றாழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டையான சதைப் பற்றுள்ள இலைகளை கொண்ட ஒரு செடி தான். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஒன்றல்ல இரண்டல… Read More
  • Quran எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு.(அல்குர்ஆன்: 13… Read More
  • இஸ்லாமிய பெண்கள் பாஸ்போர்ட் விசாரனைக்கு காவல்நிலையம் செல்ல தேவையில்லை...! கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தில்லைநகர் காவல்நிலையத்தில் தென்னூர் பகுதி பெண்கள் பாஸ்போர்ட் விசாரணைக்காக நீண்ட நேரம் குற்றவாளி போல காக்க… Read More
  • கண மலை முபட்டி 14/04/2015,  இரவு   12:22  முதல் 01: 47 வரை கண மலை ,   … Read More