வியாழன், 16 பிப்ரவரி, 2017

குண்டுவெடிப்பில் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!

2016ம் ஆண்டில் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளை விட இந்தியாவில்தான் அதிக குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாக தேசிய வெடிகுண்டு தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தேசிய வெடிகுண்டு தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 406 குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அதேநேரம் போர் மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இந்தியாவை விட குறைவான குண்டு வெடிப்புச் சம்பவங்களே நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈராக்கில் கடந்த ஆண்டில் 221 குண்டு வெடிப்புச் சம்பவங்களே நிகழ்ந்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் 161 சம்பவங்களும் ஆப்கானிஸ்தானில் 132 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் 2016 மார்ச் மாதம் அதிகபட்சமாக 42 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதிகபட்சமாக காஷ்மீர் மாநிலத்திலேயே அதிக குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் தேசிய வெடிகுண்டு தகவல் மையத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
http://ns7.tv/ta/tamil-news/india/16/2/2017/most-bomb-blasts-happened-india-compared-siriya-iraq-and-afganistan

Related Posts: