வியாழன், 16 பிப்ரவரி, 2017

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றால் திமுக மகத்தான வெற்றி பெறும்: மார்க்கண்டேய கட்ஜூ

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவதன் மூலம் அதிமுக தனது அழிவுப் பாதையை தேர்வு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றால் திமுக மகத்தான வெற்றி பெறும்: மார்க்கண்டேய கட்ஜூ

இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கட்ஜூ வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய சூழலில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றால், திமுக மகத்தான வெற்றியைப் பெறும் என்று கூறியுள்ளார். அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்றும் மார்க்கண்டேய கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக யார் வர வேண்டும் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் ஆதரவாளர் என்று குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல், தற்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வமும், கடந்த காலங்களில் சசிகலாவின் ஆதரவாளராகவே இருந்து வந்ததையும் கட்ஜூ நினைவுபடுத்தியுள்ளார். இவர்கள் இருவர் மீது முறைகேடு புகார்கள் எழுந்துள்ளதால், ஊழல் கறைபடியாத எம்.எல்.ஏ. நட்ராஜை முதலமைச்சராக பதவியேற்கச் செய்ய வேண்டும் என கட்ஜூ விருப்பம் தெரிவித்துள்ளார். 

மேலும், பழனிச்சாமி முதல்வரானால், சிறைச் சாலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மூலமாகவே தமிழகத்தில் ஆட்சி நடைபெறும் எனவும் கட்ஜூ சூசமாக குறிப்பிட்டுள்ளார்.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/16/2/2017/dmk-will-win-if-elections-were-held-now-state-staggering-markandeya

Related Posts: