வெள்ளி, 31 மே, 2024

போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள்; தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

 போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணையை 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டது.தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டிருந்ததாவது:அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம். தற்போது...

தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெயில்! அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெப்பம் பதிவு!

 தமிழகம் முழுவதும் இன்று 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெயில் கொளுத்தியது.ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.இந்நிலையில்...

ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்தை வேறுபடுத்தியது இல்லை’

 நாட்டின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று மன்மோகன் சிங் கூறியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டிய சில வாரங்களுக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  “ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்தை வேறுபடுத்தவில்லை” என்று மறைமுகமாகக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.மக்களவைத் தேர்தல் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னால், நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழை கூறியிருப்பதாவது:...

நாடு முழுவதும் 108940 எம்.பி.பி.எஸ் இடங்கள்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு டாப்

 இளங்கலை மருத்துவம், இளங்கலை அறுவை சிகிச்சை எனப்படும் எம்.பி.பி.எஸ் (MBBS) மிகவும் விரும்பப்படும் படிப்புகளில் ஒன்றாகும், மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. மக்களவையில் சமீபத்தில் அளித்த பதிலில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், 2014-க்கு முன் இருந்த 51,348 எம்.பி.பி.எஸ் இடங்கள் 112% அதிகரித்து, தற்போது 1,08,940 ஆக உயர்த்தப்பட்டுள்ளன என்று...

வியாழன், 30 மே, 2024

காசா – எகிப்து எல்லையை

 காசா – எகிப்து எல்லைப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்....

இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச வெயில்.. டெல்லியில் வெப்பம் தகித்தது ஏன்? இந்திய வானிலை மையத்தின் விளக்கம் என்ன?

 இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச வெயில்.. டெல்லியில் வெப்பம் தகித்தது ஏன்? இந்திய வானிலை மையத்தின் விளக்கம் என்ன? 29 05 2024 தலைநகர் டெல்லியில் இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச வெயில் பதிவானதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஏற்படத் தொடங்கியிருக்கும் அசாதாரணமான பருவநிலை இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இயல்பாகவே...

ஆண்டுக்கு ரூ.1 லட்சம் – பெங்களூருவில் சேமிப்பு கணக்கு தொடங்க தபால் அலுவலகங்களில் குவியும் பெண்கள்!

 பெங்களூருவில் காங்கிரஸ் அறிவித்த 1 லட்சம் ரூபாயை பெறுவதற்கு புதிய சேமிப்புக் கணக்கை தொடங்க பெண்கள் தபால் அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர். நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றது.  அதற்கு காரணம் காங்கிரஸ் அறிவித்த திட்டங்கள்.  அதில் ஒன்று வருடத்திற்கு ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம்.நடைபெறும்...

புதன், 29 மே, 2024

கொள்கை உறுதி!

கொள்கை உறுதி! A.சபீர் அலி M.I.Sc மாநிலச் செயலாளார்,TNTJ 24வது மாநிலப் பொதுக்குழு ஈரோடு - 27.05.2024 ...

வரதட்சணை பெருகுவதற்கு பெரிதும் காரணம் ஆலிம்களா? சமூகமா?

வரதட்சணை பெருகுவதற்கு பெரிதும் காரணம் ஆலிம்களா? சமூகமா? பட்டிமன்ற நடுவர்: எம்.எஸ்.சையது இப்ராஹீம் ஆலிம்களே! A.தீன் முஹம்மது A.ஷாஜ் சமூகமே! K.அஸ்ரஃப் அலி M.A.கமால்தீன் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி -25.02.2024 மதுரை மாவட்டம் ...

குடும்பத்துடன் சுவனம் செல்வோம்!

குடும்பத்துடன் சுவனம் செல்வோம்! பேச்சாளார்,TNTJ பஹ்ரைன் - 2023 ...

அல்லாஹ்வின் உதவி அருகிலே!

அல்லாஹ்வின் உதவி அருகிலே! K.சுஜா அலி M.I.Sc TNTJ, பேச்சாளார் தலைமையக ஜுமுஆ உரை - 24.05.2024 ...

முதுமை பலவீனம் காரணமாக வணக்கவழிபாடுகளில் குறை ஏற்படுகிறது மார்க்கத்தில் சலுகை உண்டா ?

முதுமை பலவீனம் காரணமாக வணக்கவழிபாடுகளில் குறை ஏற்படுகிறது மார்க்கத்தில் சலுகை உண்டா ? செ.அ. முஹம்மது ஒலி TNTJ,மாநிலச்செயலாளர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - அரக்கோணம் கிளை ...

வட்டிக்கு வாங்கி நடத்தப்படும் ஆடம்பர திருமண விருந்தை நமது வீட்டிற்கு கொண்டு வந்து தந்தால் நாம் சாப்பிடலாமா?

வட்டிக்கு வாங்கி நடத்தப்படும் ஆடம்பர திருமண விருந்தை நமது வீட்டிற்கு கொண்டு வந்து தந்தால் நாம் சாப்பிடலாமா? செ.அ. முஹம்மது ஒலி TNTJ,மாநிலச்செயலாளர் அரக்கோணம் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ...

இஸ்ரேல் பொருட்களை புறக்கணிக்கலாமே

இஸ்ரேல் பொருட்களை புறக்கணிக்கலாமே இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 19.11.2023 பதிலளிப்பவர்: A.ஹமீதுர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாளர்,TNTJ) அம்பத்தூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ...

வரம்பு மீறிய பேச்சும், தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸும்

வரம்பு மீறிய பேச்சும், தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸும் காஞ்சி ஏ.இப்ராஹிம் - மாநிலப் பொருளாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 23.05.2024 ...

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்.19ம் தேதி சட்டப்பேரவையில்,  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,  கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில்,  இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பி.பொன்னையா வெளியிட்டு,  பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட...

நாட்டிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம்!

 சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி 40 வயது பெண்ணுக்கு கல்லீரல் அறுவைசிகிச்சை நடைபெற்றது.  இது அந்த மருத்துவமனையின் 11வது கல்லீரல் அறுவை சிகிச்சையாகும்.  இதன்மூலம் 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை...

ஏடிஹெச்டி பிரச்னை என்றால் என்ன? இது சரி செய்யக்கூடியதா?

 ஏடிஹெச்டி பிரச்சனை சரிசெய்யக்கூடியதா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? பார்க்கலாம்.குழந்தைகளிடமோ அல்லது பெரியவர்களிடமோ ஏடிஹெச்டி பிரச்சனை இருந்தால் சரிசெய்ய முடியாது. தொடர் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தெரபி மூலம் பிரச்சனை வீரியமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.ஏடிஹெச்டி என்பது குறிப்பாக மூளையின் கட்டுப்பாடோடு தொடர்புடைய பிரச்னை....

உலகில் அடுத்த பெருந்தொற்று தவிர்க்கமுடியாதது” – பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை!

 உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார்.கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு வரவே பெரும் சிரமத்தை எதிர் கொண்ட நிலையில்,  அடுத்து பெருந்தொற்று நம்மைத் தாக்கத் தயாராக உள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ்...