ஞாயிறு, 19 மே, 2024

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடிப்பு; மின் உற்பத்தி பாதிப்பு

 

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.  சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டு பிரிவுகளிலும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதனிடையே இன்று மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/boiler-tube-explosion-at-mettur-power-generation-damage-4585077

Related Posts:

  • 786 " 786 " என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?என்ற பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன ! இதற்கு விடையை சிறி… Read More
  • மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி ரொகிங்கியா மக்கள் இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியான… Read More
  • நூதன கான்கிரீட் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டால் தானாகவே சரிசெய்துகொள்ளும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் கொண்ட கற்களை கண்டுபிடித்துள்ளனர்.இதிலுள்ள நுண்ணுயிர்கள் பெருகி … Read More
  •  நோன்பு நோற்பது கட்டாயக் கடமை. புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திரு… Read More
  • Jobs Read More