திங்கள், 27 மே, 2024

இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதி கோட்பாட்டிற்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆள்கிறார்கள் - திருமாவளவன்

 இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதி கோட்பாட்டிற்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆள்கிறார்கள் - திருமாவளவன்

நாம் சாதிக்கு எதிராக இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மத மற்றும் சாதி அடிப்படையில் இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பழிவாங்குதல் நிறைந்த சமூகத்தில் இருந்து தப்பிக்க ஒரே ஆயுதம் சமூக நீதி. சமூகநீதியை படிப்படியாக நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தனர். இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதி கோட்பாட்டிற்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆள்கிறார்கள். சமூக நீதி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவானவர்கள் அதற்கு எதிரானவர்கள் இடையே தான் இந்த மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசி வரும் கருத்துக்கள் அவர் பதட்டத்திற்கு உள்ளாகிறார் என காட்டுகிறது. ஜூன் 4-ம் தேதியோடு பிரதமர் மோடியின் முடிவடைய உள்ளது என சென்னையில் நடைபெற்ற 8-வது ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம் விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்

Related Posts: