சனி, 25 மார்ச், 2023

கொரோனா பரிசோதனையை உடனே அதிகரிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

 25 3 23 

கொரோனா பரிசோதனையை உடனே அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 146 நாட்கள் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 1590 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  8,601 ஆக உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் பல மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும், கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை குற்றச்சாட்டியுள்ளது. மருந்துகள், படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவை போதிய அளவு கையிருப்பில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. இன்ஃபுளுயன்சா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.


source https://news7tamil.live/corona-testing-should-be-increased-immediately-central-government-instruction-to-states.html

Related Posts:

  • போலி என்கவுன்ட்டர்:  இந்திய ஜனநாயகத்தின் மீதான ஒரு கரும்புள்ளி ஒரு போலி என்கவுண்டர் கொலை மற்றும் ஏழு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தனது முதல் குற்ற அறிக்கை தாக்கல்… Read More
  • பொய் செய்தி நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More
  • எல்லாம் தெரியும் - முபட்டி TNTJ TNTJ, தவறுசெய்தல் - சரி என்று ஆகாது TNTJ - பாங்கு  8.00  - தொழுகை  9.15   (இஷா) தொழுகை  நேரம்   குறிக்கப்பட்ட  … Read More
  • பித்ரா பித்ரா இரண்டு காரனங்களுக்காக பித்ரா எனும் தர்மம் கடமையக்கபட்டுள்ளது . நண்பளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மை படுத்… Read More
  • News Drops Copy from Dailythanthi … Read More