வியாழன், 30 மார்ச், 2023

மத்திய அரசைக் கண்டித்து மம்தா பானர்ஜி 2வது நாளாக தர்ணா போராட்டம்..!

 30 03 2023

 மேற்கு வங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி  மத்திய அரசை எதிராக 2வது நாளாக  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேற்கு வங்க முதல் அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக நேற்று தர்ணா போராட்டத்தை துவங்கினார். மொத்தம் 2 நாட்கள் இந்த தர்ணா போராட்டம்  நடைபெறும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

மேற்கு வங்க மாநிலத்தின்  மீது மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் உடனடியாக மாநில அரசுக்கு தர வேண்டிய நிதியை தர வேண்டும் எனவும்  மம்தா பானர்ஜி  இந்த தர்ணா போராட்டத்தை அறிவித்தார்.மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனையும் படியுங்கள்: மே 10-ம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்,  சாலை மற்றும் வீட்டுவசதித்துறை போன்ற துறைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டி மம்தா பானர்ஜி இந்த தர்ணா போராட்டத்தை அறிவித்துள்ளார்.


தர்ணா போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்றும் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்றைய போராட்டத்தில் மம்தா பானர்ஜி வங்காள மொழிப் பாடலை பாடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு மாநில முதலமைச்சரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


source https://news7tamil.live/mamata-banerjees-dharna-protest-for-the-2nd-day-condemning-the-central-government.html