புதன், 15 ஜூலை, 2015

ியாளர்கள் கூறுகின்றனர்.


சிலருக்கு குறிப்பிட்ட காய்கறிகள் மிகவும் பிடிக்கும். அதற்காக, அந்த காய்கறிகளை மட்டும் அடிக்கடி வாங்கி வந்து, சமைத்து சாப்பிடுவார்கள். இப்படி, ஒரே நிறத்தில் உள்ள காய்கறியை சாப்பிட்டால், ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்து பற்றாக்குறை ஏற்படும் என, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
சமையலில் காய்கறிகளை பயன்படுத்தும்போது, ஒரே வகையான காய்கறியாக எடுத்துக்கொள்ளாமல் கேரட், பீட்ரூட், தக்காளி, முட்டைகோஸ், முள்ளங்கி என்று எல்லா காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோல், பழங்களிலும் குறிப்பிட்ட பழங்களை மட்டும் சாப்பிடாமல் ஆப்பிள், திராட்சை, மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என்று எல்லா பழங்களுக்குமே முக்கியத்துவம் தர வேண்டும்.
உதாரணமாக, மதிய உணவில் குறைந்தது, 7 வெவ்வேறு இயற்கை வண்ணம் கொண்ட உணவுப் பொருட்கள் இருப்பது மிகவும்
நல்லது. ப்ரெஷ் ஆக வாங்கும் காரட்டின் மஞ்சள் கலர், சத்துள்ள காஷ்மீர் ஆப்பிளின் சிவப்பு கலர், திராட்சையின் அடர் நீல நிறம், கீரையின் பச்சை பசேல் நிறம்... இப்படிப்பட்ட காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும்.
இவ்வாறு உணவு எடுத்துக்கொள்ளும் போது, அதிக அளவிலான உயிர்ச்சத்துகள் நமக்கு கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கு, நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.