வியாழன், 10 டிசம்பர், 2015

பாதுகாப்பு செயலருக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் வழக்கு


முன்னாள் மாநில தலைவர் (தமிழகம்)
பி.ஜே.யின் இலங்கை வருகைக்கு தடை
தென்­னிந்­திய இஸ்­லா­மிய பிர­சா­ரகர் பி.ஜெய்­னு­லாப்­தீனின் இலங்கை வரு­கையை தடை செய்­யு­மாறு உத்­த­ர­விட்ட பாது­காப்பு செய­லா­ள­ருக்கு எதி­ராக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்­துள்­ளது.
சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் மூல­மாக தமது அமைப்பு இவ் வழக்கை தாக்கல் செய்­த­தாக ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமாஅத் தெரி­வித்­துள்­ளது.
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சார்­பாக கடந்த 08.11.2015 அன்று கொழும்பில் நடத்­தப்­பட்ட அல் குர்ஆன் சிங்­கள மொழி பெயர்ப்பு நிகழ்­வுக்கு வருகை தர­வி­ருந்த தென்­னிந்­திய இஸ்­லா­மிய பிர­சா­ரகர் பி.ஜெய்­னு­லாப்­தீ­னுக்­கான விசா அனு­ம­தியை கடைசி நேரத்தில் இரத்துச் செய்­யு­மாறு பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி உத்­த­ர­விட்­ட­மைக்கு எதி­ரா­கவே உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
பி.ஜெய்­னு­லாப்­தீனின் வரு­கைக்­கான உத்­தி­யோ­க­பூர்வ அனு­ம­தியை முஸ்லிம் சமய கலா­சார திணைக்­களம், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு, மற்றும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் ஆகி­யன முறை­யாக வழங்­கி­யி­ருந்தும், ஒரு குறிப்­பிட்ட அர­சி­யல்­வா­தியின் தேவைக்­காக எவ்­வித கார­ணமும் குறிப்­பி­டப்­ப­டாது பி. ஜெய்­னு­லாப்­தீ­னுக்கு வழங்­கப்­பட்ட விசா அனு­மதி கடைசி நேரத்தில் பாது­காப்பு செய­லா­ள­ரினால் இரத்துச் செய்­யப்­பட்­டது.
எவ்­வித உரிய கார­ணங்­க­ளு­மின்றி சில அர­சி­யல்­வா­திகள் மற்றும் உல­மாக்­களின் அழுத்­தங்­களின் பேரில் தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுத்து பி.ஜெய்­னு­லா­ப்­தீனின் இலங்கை வரு­கையை பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி தடுத்து நிறுத்­தி­ய­தாக தௌஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த வெள்ளிக்­கி­ழமை உயர் நீதி மன்­றத்தில் தாக்கல் செய்த அடிப்­படை மனித உரிமை மீறல் மனுவில் குறிப்­பிட்­டுள்­ளது.
பி.ஜெய்­னு­லாப்தீன் இலங்­கைக்கு வருகை தரு­வது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிலரும் தமது எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­த­துடன் அவ­ரது வரு­கையை தடை செய்­யு­மாறு பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரை கடிதம் மூல­மா­கவும் நேர­டி­யாக சந்­தித்தும் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­த­மையும் குறிப்பிட ஆத்தக்கதாகும்
Kaalaimalar's photo.

Related Posts: