வியாழன், 25 மே, 2023

குப்பை வண்டியில் வந்த உணவுப் பொருட்கள்; துறையூர் அம்மா உணவகத்தில் அதிர்ச்சி

 24 5 23

trichy

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 12 பணியாளர்கள் சமையல் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அம்மா உணவகத்தில் காலை இட்லி, சாம்பார், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் என தினமும் சுமார் 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படுகிறது. துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மினி ஆட்டோ வாகனத்தில் அம்மா உணவகத்திற்கு அரிசி மூட்டைகள் வந்து இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாமர மக்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்கள் பசியாறும் உணவுக்குண்டான அரிசியை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் குப்பை வாங்க பயன்படுத்தும்மினி ஆட்டோவில் சுகாதார அதிகாரியின் மேற்பார்வையில் அரிசி வந்து இறங்கிய நிகழ்வு பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் பொது மக்களை முகம் சுளிக்கும் வண்ணம் அமைந்தது.

மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றி துறையூர் நகர்மன்றத் தலைவரான செல்வராணியிடம் கேட்ட போது, “அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு கடந்த ஒரு வார காலமாக இருந்து வந்துள்ளது. எனது கவனத்திற்கு பணியாளர்கள் நேற்று முன்தினம் தான் தெரியப்படுத்தினர். உடனடியாக தேவைப்படும் அரிசி மூட்டைகளை ஏற்பாடு செய்து அதனை தனியாக வாடகை வண்டி மூலம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினேன்.

ஆனால் இடையில் ஏதோ தவறு நடந்துள்ளது. எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். துறையூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளரின் நேரடிப் பார்வையில் உள்ள அம்மா உணவகத்தில் தரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை தினந்தோறும் ஆய்வு செய்து, சுத்தமான உணவை வழங்கிட வேண்டிய நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மெத்தன போக்கால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-trichy-amma-unavagam-foodstuffs-garbage-truck-677600/

Related Posts:

  • தகுதி பெற்ற ஒரே இந்திய வீரர் ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடக்கவிருக்கிற ஒலிம்பிக் போட்டியில் வாள்சண்டை போட்டிப் பிரிவுக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய வீரர், தமிழகத்தைச் சேர்ந்த… Read More
  • சவுதி மன்னருக்கு எதிராக ஃபத்வா கொடுக்க முன்வருமா? பிரதமர் மோடிக்கு சவுதியின் உயரிய விருதாம்.. இஷ்ரத் ஜெஹான், பில்கிஸ் மற்றும் கவ்சர், 2002 கோத்ரா, அப்பாவி அஃக்லக் மற்றும் இன்னும் பல பட… Read More
  • இறைதூதர் தலைவர் கருணாநிதி அறிவிப்பு கடந்த மார்ச் 28ம் தேதி சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் … Read More
  • சாடிலைட் செயலிழப்பு திருநள்ளாறுக்கு அருகில் சாடிலைட் செயலிழப்பு பார்ப்பணர்களின் புருடா அம்பலப்படுத்துகிறார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை (function(d, s, id) { var… Read More
  • சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும். சாப்பிட்டவுடனேயே பழங்களை… Read More