திங்கள், 29 மே, 2023

ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள்; மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் புகார் அளித்த பள்ளி சிறுமி!…

 29 5 23

ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம், பள்ளி சிறுமி நேரில் புகார் அளித்துள்ளார்.

நாகை மாவட்டம், பெருங்கடம்பனூரில் 3 குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தூர்வாரும் பணியை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியரிடம் சிறுமி மனு அளித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பெருங்கடம்பனூரில், நற்பணி கழகம் என்ற ஊர் அமைப்பில் இருந்து விலகியதால் சோமசுந்தரம் என்பவரது குடும்பம் உள்ளிட்ட 3 குடும்பங்கள் கடந்த 3 வருடங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். உறவினர் இறப்புக்கு கூட போக முடியாமல் அந்த குடும்பத்தினர் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தேவநதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய அந்த பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிசை பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பள்ளி சிறுமி சந்தித்து, சால்வை அணிவித்து தாம் கொண்டுவந்த மனுவை அளித்தார்.

தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார். அந்த சிறுமியை நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்


source https://news7tamil.live/displaced-families-the-school-girl-complained-to-the-district-head-in-person.html

Related Posts:

  • எல்லாம் தெரியும் - முபட்டி TNTJ TNTJ, தவறுசெய்தல் - சரி என்று ஆகாது TNTJ - பாங்கு  8.00  - தொழுகை  9.15   (இஷா) தொழுகை  நேரம்   குறிக்கப்பட்ட  … Read More
  • பொய் செய்தி நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More
  • தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்! தமிழச்சி - Tamizachi: தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More
  • News Drops Copy from Dailythanthi … Read More
  • பித்ரா பித்ரா இரண்டு காரனங்களுக்காக பித்ரா எனும் தர்மம் கடமையக்கபட்டுள்ளது . நண்பளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மை படுத்… Read More