புதன், 31 மே, 2023

கீவ் நகரில் தொடர்ந்து 3வது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் – ஒருவர் பலி

 

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து மூன்றாவது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

30 5 23

கடந்த ஒராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இருதரப்பினரும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் நேற்று டிரோன்கள் மூலம் குண்டுவீசி ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் உயரமான பல கட்டடங்களின் மேல்மாடி தளங்கள் கடும் சேதமடைந்ததுடன், தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 4-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து உக்ரைன் படையினர் 20க்கும் மேற்பட்ட டிரோன்களை சுட்டுவீழ்த்தியதுடன், தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/3rd-consecutive-night-of-drone-strikes-in-kyiv-one-dead.html