வியாழன், 5 மார்ச், 2015

வன்மையாகக் கண்டிக்கிறோம்...!


இடஒதுக்கீடு வேண்டுமானால் பாகிஸ்தானிடம் போய்க்
கோரிக்கை வையுங்கள்” என்று இந்திய முஸ்லிம்களைக்
கொச்சைப்படுத்தி எழுதிய சிவசேனா கட்சியை
வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்திய மண்ணில் பிறந்து,
இந்திய மண்ணின் சுதந்திரத்துக்காகப் போராடி,
இந்திய மண்ணில்தான்வாழ்வோம் என்று இங்கேயே தங்கி,
இந்திய மண்ணின் வளர்ச்சிக்காகவே
தொடர்ந்து பாடுபட்டு,
இந்தியாவையே தங்களின்
உயிர்மூச்சாய் நேசிக்கும் கோடிக் கணக்கான முஸ்லிம்களின்
மனத்தைப் புண்படுத்தும் இதுபோன்ற எழுத்துகளுக்கும்
அமைப்புகளுக்கும் நடுவண் அரசு
தடைவிதிக்க வேண்டும் என்று கோருகிறோம்.