வெள்ளி, 13 மார்ச், 2015

கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலா? இல்லை காவித் தீவிரவாதமா?


குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டவன் இந்து இளைஞர் சேனா பிரமுகராம் !
குண்டு வைக்காத பன்னா இஸ்மாயில் பக்ருதீன், பிலால் மாலிக் தீவிரவாதிகளாம் !
குண்டு வைத்தவன் காவல் விசாரணையில் போஸ் கொடுக்கிறான்! போன் பேசுகிறான்!
குண்டு வைக்காதவனை முகமூடி போட்டு அழைத்து வருவாங்களாம்!
அலுவலகத்தில் வெடிமருந்து கைப்பற்றினாலும் அவர்கள் இயக்க பிரமுகர்களாம் !
எந்த ஆயுதங்களும் கைப்பற்றவில்லை என்றாலும் இவர்கள் தீவிரவாதிகளாம்!
தொலைக்காட்சி அலுவலகத்தில் புகுந்து பெண் நிருபரைத் தாக்கி , காமிராவை உடைத்து , வெடிகுண்டு வீசிய செயலை காவித் தீவிரவாதம் என்று கூறாமல் அனைவரும் கருத்து உரிமைக்கு எதிரான வன்முறை என மென்முறையைக் கையாளும் கொடுமையை என்ன சொல்வது ?
மணிரத்தினம் வீட்டில் குண்டு வெடித்த போது தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவுகிறது என்று வெகுண்டு எழுந்து வினையாற்றிய சூப்பர் ஸ்டார் எங்கே இருக்கிறார்?
ஆம் செய்தவர்கள் முஸ்லிம்கள் இல்லையே ! இதையே முஸ்லிம்கள் செய்து இருந்தால் கூட்டு மனசாட்சி கூடி கும்மியடித்து கூப்பாடு போட்டு இருக்கும்!
-செங்கிஸ்கான்