திங்கள், 16 மார்ச், 2015

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி


திருச்சி, : டெல்லி மேலாண்மை இயக்குனர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பெங்களூரு தனியார் நிறுவனம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத் தின்படி வேலையில்லா இளைஞர்களுக்கு இகாம் இன்டக்ஷன் பயிற்சி திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. இந்த பயிற்சி 4 வாரங்கள் நடக்கிறது. பயிற்சியின் முதல் வாரம் வரும் 23ம் தேதி முதல் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருச்சியில் வகுப்பறை பயிற்சியாகவும், அடுத்த 3 வாரங்கள் பிலிப் கார்ட் நிறுவனத்தினரால் பணி தொடர்பான பயிற்சியும் வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப் படும். இதில் சேர 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் முன்அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்து பணியில் சேரும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் ரூ.6,500 முதல் ரூ.8,500 வரை ஊதியம் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் இருசக்கர மோட்டார் வாகனத்துக்கான ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பெட்ரோல் செலவுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2.50 வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு துணை இயக்குனர் அல்லது முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், திருச்சி என்ற முகவரியிலோ அல்லது 0431-2552238 தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.