திங்கள், 4 ஏப்ரல், 2022

தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன்.

 3 4 2022 நான் டெல்லிக்கு சென்று யார் காலிலும் விழுந்து எனக்கு இது செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் துபாய் பயணத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணத்தையும் அங்கே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்ததையும் இ.பி.எஸ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஸ்டாலினுக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்கவே டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார் என்று செய்திகள் வருகிறது. டெல்லி பயணம் குறித்து ஸ்டாலின் விளக்குவாரா என்று இ.பி.எஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், நான் டெல்லிக்கு சென்று யார் காலிலும் விழுந்து எனக்கு இது செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “நான் துபாய்க்கு பல கோடி ரூபாயை எடுத்துசென்றதாக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதற்கு எனக்கு முன்பு இங்கு பேசியவர்களே பதில் சொல்லிவிட்டார்கள்.

அதேபோல், இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு மூன்று நாட்கள் சென்றிருந்தேன். அப்போது, நம் மாநிலத்திற்கு தேவையான கோரிக்கைகளை எல்லாம், பிரதமரிடத்திலும், அந்ததந்தத் துறை அமைச்சர்களிடத்திலும் வலியுறுத்தி, உரிமைக்கு குரல் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். இதனை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமலும், மூடிமறைக்கவும் சிலர், ஏதோ அச்சத்தின் காரணமாக, பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக்கொண்டு என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக டெல்லி சென்றேன் எனச் சொல்லிவருகிறார்கள்.

ஒன்றை மட்டும் நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நான் அங்கு சென்று யார் காலிலும் விழுந்து ‘எனக்கு இது செய்து தாருங்கள்’ என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத் தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, பதவி ஏற்றபோதே சொன்னேன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’. கலைஞரின் மகன் என்றைக்கும் தமிழ்நாட்டிற்காக உழைப்பான்” என்று பேசினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-retaliate-to-eps-that-i-am-not-ordinary-stalin-435323/

Related Posts:

  • திருச்சி விமான நிலையம் திருடர்களின் கூடாரமா ? மனக்குமுறளுடன் ஒரு பதிவு... திருச்சி விமான நிலையம் திருடர்களின் கூடாரமா ? கடத்தல் செய்பவர்களை காசு வாங்கி கொண்டு அனுப்பும் இவர்கள் பிழைப்புக்… Read More
  • யார் இந்த பீட்டா? PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. … Read More
  • அவரைக்காயின் மருத்துவ பலன்கள் அரிய மருத்துவ குணங்களை கொண்ட அவரைக்காய் எளிதில் ஜீரணமாகும் சக்தி கொண்டது.இதில் வைட்டமின்கள் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளன, பித்தத்தினால் உ… Read More
  • அர்த்தம் என்று தெரியவில்லை - மத்திய அரசு. இந்து என்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை - மத்திய அரசு. அர்த்தம் தெரியாமலே தான் இந்து வை வச்சி அரசியல் பன்றிங்களாடா... அட மானங்கெட்டவிங்களா… Read More
  • Quran அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக! அல்குர்ஆன் 47:19 … Read More