தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது.
மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்:
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிமுகப்படுத்திய தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் நிறைவேறியது. நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக் கொண்டே செல்வதால் அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், நிலப்பரிமாற்ற முறையை சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்கும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 100 ஏக்கருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலைகள் இருந்தால், அந்த இடத்தில் வணிகம், தொழிற்துறை, சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் விண்ணப்பிக்கலாம் எனவும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டத்தை முன்னெடுப்பவரின் விண்ணப்பத்தை நிபுணர் குழு நினைத்தால் தள்ளுபடி செய்யலாம் அல்லது நிராகரிக்கலாம் என்ற வாய்ப்பே இல்லை என்பதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/land-consolidation-bill-passed-in-tamil-nadu-legislative-assembly-request-for-withdrawal.html