ஞாயிறு, 30 ஜூன், 2024

சாத்தான்குளம் மரணத்தை அதிமுக மறைத்ததைப் போல கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்கவில்லை

 சாத்தான்குளம் மரணத்தைப் அதிமுக மறைத்ததைப் போல கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்கவில்லை என  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையின் கடைசி நாளான இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். அதில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..நாற்பதுக்கு நாற்பது என்ற...

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும்” – ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

 பீகார் மாநிலத்துக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி கூடுதல் நிதியை மாநிலத்துக்கு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்....

“பூரண மதுவிலக்கே தீர்வு”- திருமாவளவன் பேட்டி!

 மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான் எனவும், ஆனால் பூரண மதுவிலக்கு என்பதே தீர்வு எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,கள்ளச்சாராய, நச்சுச்சாராய உயிரிழப்புகள் இந்தியா முழுவதும் உள்ளது. இதற்கு தீர்வு என்பது பூரண மது விலக்கு. டாஸ்மாக் கடையில்...

காசாவில் இதுவரை 37834 பேர் உயிரிழப்பு” – சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

 கடந்த அக். 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,834-ஆக அதிகரித்துள்ளது.30 06 2024 கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகள் இடையே போர் பூண்டது. இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இதனிடையே...

தமிழக அரசின் மின் கொள்முதல் அமைப்பில் முறைகேடுகள்; சி.ஏ.ஜி அறிக்கை

 தமிழக அரசின் முறையான கண்காணிப்பு இல்லாததால் மின் கொள்முதல் (eProcurement) இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டதாக இந்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்) இ-கொள்முதல் (eProcurement) அமைப்பில் ஏலக் கூட்டுகள், குடும்ப உறவுகளுடன் ஏலதாரர்கள், கொள்முதல் செய்யும் நிறுவனக் கணினிகளிலிருந்து ஏலம் சமர்ப்பித்தல் மற்றும் வெவ்வேறு ஏலதாரர்கள் ஒரே ஐ.பி (IP) முகவரியில் இருந்து...

கொடநாடு கொலை வழக்கில் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்த இன்டர்போலின் உதவி தேவை : ஸ்டாலின்

 கொடநாடு கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்த இன்டர்போலின் உதவி தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தெரிவித்தார்.மாநிலங்களவையில் உள்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த ஸ்டாலின், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய சிம்கார்டுகளை தடயவியல் ஆய்வு செய்ததில், குற்றம் நடந்தபோது சர்வதேச அழைப்புகள் வந்திருப்பது தெரியவந்துள்ளது என்றார்.கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா...

கள்ளச் சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்ட மசோதா நிறைவேற்றம்

 கள்ளச் சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்ட மசோதா நிறைவேற்றம்தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று. நேற்று கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு துறை வாரியான மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று, சட்டப் பேரவையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.  source https://tamil.indianexpress.com/tamilnadu/illicit-liquor-crimes-imprisonment-for-life-new-bill-478730329...

தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

 தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 12  இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்க ஆதரவாளர்கள் வீடுகளில் புலனாய்வு  முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பகுதியில் ஜேசிஸ் ஸ்கூல் அருகில் ஷர்புதீன் என்பவர்...

சனி, 29 ஜூன், 2024

1998, 2019, 2024: ஜனாதிபதியின் 3 உரைகளில் தேர்தல் முடிவுகள், அரசியலமைப்பு, கூட்டணி பற்றி கூறியது என்ன?

 வியாழன் அன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையானது, அடுத்த ஐந்து வருடங்கள் முந்தைய பத்தாண்டுகளில் கட்டமைக்கப்பட்டவையின் தொடர்ச்சியாக இருக்கும் என்ற வலுவான உறுதிப்பாடாக இருந்தது. கூட்டணி கட்சிகளைப் பற்றி குறிப்பிடாமல், "தீர்மானமான ஆணையின்" பின்னணியில் மூன்றாவது முறையாக அரசாங்கத்திற்கு "தெளிவான பெரும்பான்மையை" இந்த உரை சுட்டிக் காட்டியது மற்றும் கடந்த காலத்தின் "நிலையற்ற" (கூட்டணி) அரசாங்கங்களை விமர்சித்தது.ஆங்கிலத்தில் படிக்க:2019ஆம்...

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல்: ஸ்டாலின் அறிவிப்பு

 மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல்: ஸ்டாலின் அறிவிப்பு28 06 2024கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 65 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு...

இன்ஜினியரிங் கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம்? மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

 தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங்கிற்கான செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை செயல்முறையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிக்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இந்தநிலையில்,...

நீட் முறைகேடு: 'விவாதம் நடத்த விரும்புகிறோம்': ராகுல் காந்தி உருக்கமான பேச்சு - வீடியோ

 இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக கடந்த மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 4 ஆம் தேதி முன்கூட்டியே வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண் என பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.பல்வேறு முறைகேடு புகார் கிளம்பி இருப்பதால் இந்த தேர்வை ரத்து...