வெள்ளி, 28 ஜூன், 2024

போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

 

போக்சோ வழக்கில் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும்,  பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த போலீசார் விசாரிக்க தொடங்கினர். 

இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றம் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவை விசாரித்த விசாரித்த உயர்நீதிமன்றம் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனிடையே புகார் கொடுத்த அந்த 17 வயது சிறுமியின் தாய் திடீரென ஒரு நாள் மரணமடைந்தார்.  நுரையீரல் புற்றுநோய் காரணமாகத்தான் அவர் இறந்ததாகவும் தகவல்கள் வெளியானது.  தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் சிஐடி போலீசார் கடந்த 17ம் தேதி சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.  இந்த நிலையில் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் சிஐடி போலீசார் இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

source https://news7tamil.live/chargesheet-filed-against-yeddyurappa-in-pocso-case.html

Related Posts:

  • May 6 - "‪#‎இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம்‬ -ஆலங்குடி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... 🌂அன்பார்ந்த சுன்னத் ஜமாஅத் , ஜாக் , த.மு.முக, தப்லிக் ஜமாஅத் , SDPI சகோதரர்களே... 🌂தவ்ஹீத்… Read More
  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பயணம் மோடியும் ரயில் பயணம் செய்தார், மூன்று பேர் பயணம் செய்வதற்கு ஒரு பெட்டி முழுவதையும் ஆக்கிரமித்து அதில் பொது மக்கள் ஏறாத வண்ணம் பாதுகாப்பு அதிகாரிகளா… Read More
  • Power of Learning நான் எத்தனையோ பேச்சை கேட்டு இருக்கிறேன்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... எவ்வளவு அழகான பேச்சு!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீர் என்று...நன்றி : Abdul … Read More
  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வ… Read More
  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ரமலான் நோன்பு கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்களின் முடிவில் நோன்பு நோற்பதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாகவும்&nb… Read More