சனி, 22 ஜூன், 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு; மொத்தம் 64 பேர் மனு

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு; மொத்தம் 64 பேர் மனு 22 6 24 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நிறைவடைந்தது. இதுவரை 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கியது. 

அ.தி.மு.க விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் ஜூன் 21-ம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் இதுவரை 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அளித்த மனுக்கள் மீது 24ம் தேதி பரிசீலனை நடக்கிறது. மனுவை திரும்ப பெற 26ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதையடுத்து, ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/vikravandi-byelection-nominations-completed-total-64-people-file-nominations-4773861