புதன், 18 மே, 2016

சாதிக்பாட்சா கொலை

பத்திரிகை செய்தி
தமிழக காவல் துறை அமைதி காப்பதின் மர்மம் என்ன ?
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் 
ஆ. ராசாவின் உதவியாளராக இருந்த சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்ததாக காவல் துறை வழக்கு
பதிவு செய்து அமைதியாக இருந்தது.
இந்நிலையில் ஆ.ராசாவின் 2 G ஊழல் வழக்கு சிபிஐ விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்த சாதிக்பாட்சாவை கொலை செய்தது நான் தான் என திருச்சி பத்திரிக்கையாளர்களிடம் அரியலூரை சேர்ந்த பிரபாகரன் என்ற வாலிபர் தெரிவித்தார். மேலும் ஜாபர்சேட் கழுத்தை நெரிக்க, நான் கால்களை பிடிக்க ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார் வயிற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள சாதிக்பாட்சா கொலை டி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்நது என பிரபாகரன் பேட்டி.
ஊடகங்கள் மத்தியில் நான் தான் சாதிக் பாட்சாவை கொலை செய்தேன் என பிரபாகரன் என்றவர் பேட்டி கொடுத்துள்ளார் ஆனால் தமிழக காவல் துறை அமைதி காத்துக் வருகிறது ...
தமிழக காவல் துறை இயக்குனர் அவர்கள் உடனே திருச்சி ஊடகவியளாலர்கள் மத்தியில் சாதிக் பாட்சாவை நான் தான் கொலை செய்தேன் என பகிரங்கமாக பேட்டி கொடுத்த பிரபாகரனை கைது செய்து வழக்கின் உண்மை தன்மையை நீதியின் முன் நிறுத்தி நிருபிக்க வேண்டும்
குறிப்பு :- திருச்சி ஊடகவியலாளர் மத்தியில் பேட்டி கொடுத்த பிரபாகரன் புகைப்படம் ....