ஞாயிறு, 29 மே, 2016

நேர்மையான அதிகாரிகள்

திரு.சகாயம் IAS அவர்களைப் போல் நேர்மையான அதிகாரிகள் இன்றும் தமிழகத்தில் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.
இவர் நெடுஞ்சாலைகள் துறையில் தலைமை பொறியாளர். (Chief Engineer - Highways). ஒரு ருபாய் கூட லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி. 2010-ல் கொடுமுடியில் தனக்கு சொந்தமான 30 லட்சம் மதிப்புடைய பூர்வீக நிலத்தை பொதுமக்கள் "உடல்நலம், மனவளம்" பெறவேண்டும் என்ற உயரிய சிந்தனையில் "உலக சமுதாய சேவா சங்கத்துக்கு" தானமாக வழங்கி இன்புற்றவர்.
தனது நெடுஞ்சாலை துறை சக ஊழியர்களுக்கு உடற்பயிற்சி/தியான கூடத்தை அமைத்து... அவர்களும் சிறப்பாக வாழவேண்டும் என்று தொண்டாற்றி வருபவர்.
இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகள் இன்றும் பலர் இருக்கவே செய்கிறார்கள்.... அவர்களை முகனூல் போன்ற social media வெளிக்கொண்டு வருவது அதன் தனி சிறப்பு. நல்லதை பகிர்வோம், பரப்புவோம், பாராட்டுவோம்!
அவர் நேர்மையான பணி மென்மேலும் சிறந்து தமிழகம் பயன்பெற வாழ்த்துவோம். அருள்நிதி பரமேஸ்வரன் ஐயா வாழ்க வளமுடன். அவர்கள் அன்புக் குடும்பம் வாழ்க வளமுடன்.