வியாழன், 27 அக்டோபர், 2016

சத்தமில்லாமல் அறங்கேற்றபடும் பர்மா இனபடுகொலை.! உலக நாடுகள் மௌனம்..!


பாலியல் வல்லுறவு ,கட்டாய வெளியேற்றம் கண்ணீர் விட்டழுகிற பர்மா முஸ்லிம்கள்..!
மியான்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலைகள்,பாலியல் வல்லுறவுகள் ,கொள்ளைகள் ,பலவந்த வெளியேற்றங்கள் , தீவைத்து எரிப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் சர்வதேச சமுகம் தலையை திருப்பிய வண்ணம் உள்ளது .
இரு தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் தாயொருவரும் அவரது மகளும் இருவருக்கும் முன்னால் மியான்மார் படையினரால் பாலியல் வல்லுறவு படுத்தப்பட்டுள்ளனர் . நேற்றைய தினம் மங் டாவ் பகுதியில் மூன்று மாத கர்ப்பிணியான முஸ்லிம் பெண் ஒருவர் பல பர்மீய இராணுவத்தனரால் கூட்டமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் .
கடந்த வாரம் மாத்திரம் பத்து முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவுப்படுத்த்க்கப்பட்ட நிலையில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்கிற விபரம் இன்னமும் தெரிய வராமல் உள்ளது .
வன்முறைகள் காரணமாக சுமார் 15 ஆயிரம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் . பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டுள்ளன . புனித குர் ஆண் கிழிக்கப்பட்டு அதன் மேல் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளன . அங்குள்ள நிலை நாளுக்கு நாள் மோசமடைவதாக கூறப்படுகிறது .
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உணவுப்பொருட்கள் தண்ணீர் இன்றி கடும் கஷ்டமான நிலையில உள்ளதாக அங்கிருந்து கிடைக்கிற தகவல்கள் கூறுகின்றன. பர்மிய ராணுவமும் பௌத்த மத வெறியர்களும் இந்த இனபடுகொலையை செய்து வருகின்றனர்..பர்மா அரசு இதனை தடுக்காமல் கள்ள மௌனம் காத்துவருகிறது.