திங்கள், 31 அக்டோபர், 2016

அக்டோபர் 31 இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்:

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக
சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு உள்ளே
இராணுவத்தை அனுப்பிய ஒரே காரணத்திற்காக நாட்டின் பிரதமர் என்று கூட பார்க்காமல் இரும்பு மங்கையை சீக்கியர்கள் சிதைத்த நாள் இன்று தான். !
கோவிலின் புனிதம் கெட்டுபோய் விட்டதாக கருதிய சீக்கியர்கள் நாட்டின் பிரதமரையே கொன்ற நாள் இன்று தான் .!
இந்த நாளில்….!
450 ஆண்டுகள் பழமையான முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை இடிக்க காரணமான அப்போதைய இந்திய பிரதமர் நரசிம்ம ராவை முஸ்லிம்கள் எதுவுமே செய்யவில்லை என்பதையும் சேர்த்தே நினைவு கூறுவோம்.! இந்த அப்பாவி முஸ்லிம் மக்களை தானே தீவிரவாதிகள் என்று அவதூறுகள் செய்கிறார்கள்.
இந்திரா காந்தி சுட்டுக் கொலை – சம்பவம்
மகாத்மா காந்தி அவர்கள் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா காந்தி மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனையை இந்திரா காந்தி ஏற்கவில்லை.
டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் ரோட்டில் உள்ளது.
ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா காந்தி அவர்கள் நடந்தே செல்வது வழக்கம்.
1984 அக்டோபர் 31_ந்தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும்
5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். பாதையின் வலது புறத்தில் புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப்_இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்.
இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் (வயது 33) தன் கைத்துப் பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். அதே சமயம் சத்வந்த்சிங் (26) இயந்திரத் துப்பாக்கியால் (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து விட்டன.
இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார். இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் மரணம் அடைந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.
சிந்தனை:
பாபர் மசூதி க்காக நரசிம்ம ராவை முஸ்லிம்கள் எதுவுமே செய்யவில்லை என்பதையும் இந்த நாளில் நினைவு கூறுவோம்.!

Related Posts:

  • அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை.! அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தாங்கள் மீது பொறுப்பு சுமத்தப்பட்டா… Read More
  • .இவன் ..பக்க பிராடு இஸ்லாமியர்கள் பத்திரிகை துரை இல் .கம்மியாக உள்ளார்கள் .ஆகையால் .1. நபர்க்கு .4500.விதம் .பணம் .கட்டிவிட்டால் .போலீஸ் .கிரைம் .என்ற .பத்தி… Read More
  • இஸ்ரேலியருக்கு விமான டிக்கெட் கிடையாது – குவைத் அதிரடி.! இஸ்ரேலியருக்கு விமான டிக்கெட் கிடையாது – குவைத் அதிரடி.! சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருக்கும் நபர் ஒருவருக்கு விமான டிக்கெட் விற்பனை செய்… Read More
  • Quran உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின… Read More
  • சிறந்த மருத்துவக் குறிப்புகள் உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம். ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம… Read More