சனி, 31 ஆகஸ்ட், 2024

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறது?

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறது? என்பது பற்றி கூறுகிறது இந்த செய்தி. 31 08 2024 தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான பொருட்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சியே ‘தடம்’. கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்களை முதலீட்டாளர்களுக்கு...

சென்னையில் இன்று #Formula4 கார் பந்தயம் தொடக்கம்!

 31 08 2024 சென்னையில் இன்று #Formula4 கார் பந்தயம் தொடக்கம்!சென்னையில் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் இன்று தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது....

பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும்; ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

 தமிழக அரசு பி.எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா அபியான்) கீழ் ஆண்டுதோறும் 4 தவணையாக மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியை மத்திய...

மேயருக்கு அல்வா கொடுத்த கவுன்சிலர்:

 திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் தீண்டாமை உறுதிமொழி வாசித்தார் அதனைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பித்ததும் திருச்சி மாநகராட்சி 63 வது வார்டு திமுக கவுன்சிலர் பொற்கொடி...

இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி முதல் காலாண்டில் 6.7 சதவீதமாக சரிவு

 30 08 2024 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய நிதியாண்டின் 8.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2023 ஜனவரி-மார்ச் காலாண்டில் 6.2 சதவீதமாக இருந்தது.இருப்பினும், சீனாவின் ஜி.டி.பி வளர்ச்சி முதல் காலாண்டில் 4.7 சதவீதமாக இருப்பதால்,...

சிவாஜி சிலை உடைந்து விழுந்த விவகாரம்; மன்னிப்புக் பிரதமர்

 மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததற்கு மன்னிப்புக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மராட்டியப் பேரரசர் சிவாஜி எனக்கும் எனது சகாக்களுக்கும் வெறும் ராஜா மட்டுமல்ல, என்று பால்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றும்போது கூறினார்.எனக்கும், எனது சகாக்களுக்கும், அனைவருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வெறும் அரசர் மட்டுமல்ல. அவர் மிகவும் மதிக்கப்படுகிறார், வணங்கப்படுகிறார்....

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்! 30 08 2024 அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும்...

இமாச்சலில் பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்தி மசோதா நிறைவேற்றம்: அடுத்த மூவ் என்ன?

 பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை இமாச்சலப் பிரதேச சட்டசபை செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 27) நிறைவேற்றியது. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் (இமாச்சலப் பிரதேசத் திருத்தம்) 2024, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 2006-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் (PCM) திருத்தம் செய்யப்பட்டு இந்த மசோதா...

4 மாவட்டங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!

 திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு நடைமுறைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (School Management Committee) கடந்த 2022 ஆம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து 2024-26...

மதக் கலவரத்தை உருவாக்கும் பேச்சு: அசாம் முதல்வர் மீது எதிர்க்கட்சிகள் போலீசில் புகார்

 29 8 24அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அசாம் மாநிலத்தை மியா முஸ்லிம்கள் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம்” என்று சர்ச்சைச்குரிய வகையில் பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஹிமந்தா பிஸ்வா சர்மா மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் இரண்டு வகுப்பினருக்கு இடையே  பகை ஏற்படுத்தும் வகையில்  பேசுவதாக கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித்...

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

#YChromosome மறைந்து வருவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்!

 ஆண்களிடம் காணப்படும் Y குரோமோசோம்கள் மறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.உலகம் எல்லாவற்றிலும் மாற்றமடைந்து பெரும் முன்னேற்றத்தை சந்திக்கும் போது மனிதர்களில் உள்ள இரண்டு பாலின குரோமோசோம்களில் ஒன்றான Y குரோமோசோம் எவ்வாறு மறைந்து போக வாய்ப்புள்ளது என்பதை உயிரியலாளர்கள் ஆய்வின் மூலம் அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.இந்த குரோமோசோமின் முழுமையான...

குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையில் மசோதா தாக்கல்!” – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

 கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு 10 நாள்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்யவுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல்...

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணித்த #Rahul Gandhi ! பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துனர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!

 டெல்லி மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பயணிகளிடமும் ஓட்டுநர்கள், நடத்துனர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது சாமானிய மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன? என்பது குறித்து கேட்பதையும் சிலருக்கு நேரடியாக உதவுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.இவ்வாறு செருப்பு தைக்குள்...