வியாழன், 1 ஆகஸ்ட், 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு! 31 07 2024 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் கடந்த 15 நாட்களாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  தொடர்ந்து கடந்த 29ம் முதல் நீர்வரத்து படிப்படியாக சரியத் தொடங்கியது. பின்னர் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த சூழலில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 1,40,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,75,000 கன அடியாக  அதிகரித்துள்ளது.

இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் 17-வது நாளாக தடை விதித்துள்ளது.  தொடர்ந்து, கர்நாடகாவில் இருந்து 2.20 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



source https://news7tamil.live/the-flow-of-water-in-the-okanagan-cauvery-river-has-increased-to-1-75-lakh-cubic-feet.html

Related Posts:

  • கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்தவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கையைப் பரப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சியில் நூறில் ஒரு பங்கு கூட நாம் முயற்சி செய்யவில்லை. எனினும் … Read More
  • உண்மை முஸ்லிமாக வாழ்வோம் நாம் உண்மை முஸ்லிமாக வாழ்ந்து காட்டினால் நாம் வாழும் இந்தியா கூட இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இது ஆச்சரியப்படும் விஷயமல்ல. 1400 வருட கால இடைவெளியில் இன… Read More
  • “பேய்கள் என்பது ஷைத்தான் தான் என்று இவர்கள் கண்டுபிடித்த புதிய இலக்கணமும் சரியானது அல்ல என்பது தெளிவாகின்றது. ஷைத்தான் என்றொரு படைப்பு இருப்… Read More
  • Quran & Hadis அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் உயிர் வாழ்வான்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், "அவன் பூமியில் நாற்பது நாட்கள… Read More
  • Al Fathiya ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழுவதை இஸ்லாம்  கட்டாயக் கடமையாக்கியுள்ளது. இந்தத்  தொழுகையில்  அல்பாத்திஹா அத்தியாயத்தை கண்டிப்பாக ஓத… Read More