மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வரலாறுகளை திரித்து எழுதுதல், கல்வியை காவிமயமாக்குதல் உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மோடியை பின்பற்றி பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில கல்வி வாரியத்தின் கீழான 8–ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முதல் பிரதமர் நேரு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இப்போது புதிய பாடபுத்தகத்தில் அந்த பாடங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் புதிதாக இந்துத்தாவா கொள்கையில் ஈர்ப்புடையவர்களின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.மகாத்மா காந்தி, வீர சாவர்க்கர், பகத் சிங், பால கங்காதர திலகர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் பற்றிய பாடம் இடம்பெற்றிருந்தும், நேரு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதுகாங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதையொட்டி போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சச்சின் பைலட் கூறி உள்ளார்.பாஜக அரசின் இந்த எதேச்சதிகார போக்கிற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 10 மே, 2016
Home »
» ராஜஸ்தான்: காவிமயமாகும் கல்வி – பள்ளிகளில் நேரு பாடம் நீக்கம்
ராஜஸ்தான்: காவிமயமாகும் கல்வி – பள்ளிகளில் நேரு பாடம் நீக்கம்
By Muckanamalaipatti 6:14 PM
Related Posts:
39 ஆண்டுகால சேவையை இன்றுடன் நிறைவு செய்த INS Viraat போர்க்கப்பல்!இந்திய கடற்படையில் 39 ஆண்டுகால சேவை செய்த உலகின் நீண்டகாலம் சேவையில் இருந்த போர்க்கப்பல்களுள் ஒன்றான INS Viraat விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று தனது… Read More
30 ஆண்டுகளாக பாடுபட்டு பாசன கால்வாய் வெட்டிய விவசாயி: சேவைக்கு பரிசாக கிடைத்த டிராக்டர்!30 ஆண்டுகளாக பாடுபட்டு 3 கி.மீ தூரத்திற்கு பாசன கால்வாய் கட்டிய முதியவருக்கு, மஹிந்திரா நிறுவனம் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. பீகாரில் அ… Read More
இந்தியாவில் சுமார் 23.49 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு... தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 23.49 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எயிட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில்&… Read More
புதிய கல்விக்கொள்கைபடி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும்! - மத்திய அரசு புதிய கல்விக்கொள்கைபடி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற… Read More
அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு!அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றப் போவதாக பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அற… Read More